Newsகாதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்

காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்

-

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய இளைஞர் உயிரை இழந்துள்ளார்.

சம்பவத்தின் போது 21 வயதான Netta Epstein மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் Kfar Aza, kibbutz பகுதியில் பாதுகாப்பான அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

அப்போதே ஹமாஸ் துப்பாக்கிதாரி ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அந்த ஹமாஸ் ஆயுததாரி இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கையெறி குண்டு ஒன்றை இவர்கள் மீது வீசியுள்ளார்.

ஆனால் Netta Epstein, அந்த தாக்குதலில் இருந்து தமது காதலியை காப்பாற்றும் நோக்கில், அந்த கையெறி குண்டை தமது உடம்பில் வாங்கியுள்ளார். இதில் Irene Shavit என்ற அந்த இளம்பெண் உயிர் தப்பியதுடன், பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் Netta Epstein இன் தாயார், அங்குள்ள மக்கள் மீது ஹமாஸ் முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது உண்மையில் படுகொலை என குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 7ம் திகதி தாமும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், ஆனால் இன்னொரு பகுதியில் ஒழிந்துகொண்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் kibbutz பகுதியில் அன்றைய தினம் கொல்லப்பட்ட 70 பேர்களில் தமது தாயாரும், மகனும், இரு உறவினர்களும் சிக்கிக்கொண்டனர் எனவும் உறவினர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் இஸ்ரேலில் பிறந்தாலும், அவரது பாட்டி காரணமாக கனேடிய குடியுரிமையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் Netta Epstein இஸ்ரேல் இராணுவத்தில் சேவையாற்றியும் வந்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...