Sportsதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி - உலக கிண்ண தொடர்...

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

2023- உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் தென்னுப்பிரிக்கா சார்பில் Lungi Ngidi, Marco Jansen, Kagiso Rabada ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

நெதர்லாந்து அணி சார்பில் Scott Edwards அதிகப்பட்ச 78 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 246 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்கை மட்டுமே பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் David Miller அதிகூடிய ஓட்டங்களாக 43 ஓட்டங்களை பெற்றார்.

நெதர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் Logan van Beek, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இன்றையை போட்டியை மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...