Breaking Newsகுயின்ஸ்லாந்தின் கடலோரப் பகுதியில் சூறாவளி நிலை

குயின்ஸ்லாந்தின் கடலோரப் பகுதியில் சூறாவளி நிலை

-

குயின்ஸ்லாந்து மாநில கடலோரப் பகுதியில் சூறாவளி நிலை உருவாகும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சாலமன் தீவுகள் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இதனைப் பாதித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரத்தில் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு சூறாவளியின் தாக்கம் நகரும் எனவும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல சூறாவளி நிலை பொதுவாக நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் வரை நீடிக்கும் என்றும், இந்த நிலையின் வளர்ச்சி ஆண்டின் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் சூறாவளி நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் குயின்ஸ்லாந்து மக்களுக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...