Newsவிக்டோரியாவில் பால் பண்ணை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள்

விக்டோரியாவில் பால் பண்ணை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள்

-

விக்டோரியாவில் பால் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால், பால் தொடர்பான பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

13 பணியிடங்களில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல வேலை நிலைமைகளின் அடிப்படையில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை சமீபத்தில் தொடங்கினர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பால் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் ஜோன் வில்லியம்ஸ், இது தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் வரை வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பால் தொடர்பான உணவுப் பொருட்கள் வேகமாகக் குறைந்துள்ளதுடன், நுகர்வோருக்கும் பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அதிக செலவு மற்றும் வெளிநாட்டு போட்டி உள்ளிட்ட காரணங்களால் விக்டோரியா பால் உற்பத்தித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாக பால் உற்பத்தியாளர்களின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...