Newsவிக்டோரியாவில் பால் பண்ணை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள்

விக்டோரியாவில் பால் பண்ணை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள்

-

விக்டோரியாவில் பால் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால், பால் தொடர்பான பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

13 பணியிடங்களில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல வேலை நிலைமைகளின் அடிப்படையில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை சமீபத்தில் தொடங்கினர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பால் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் ஜோன் வில்லியம்ஸ், இது தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் வரை வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பால் தொடர்பான உணவுப் பொருட்கள் வேகமாகக் குறைந்துள்ளதுடன், நுகர்வோருக்கும் பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அதிக செலவு மற்றும் வெளிநாட்டு போட்டி உள்ளிட்ட காரணங்களால் விக்டோரியா பால் உற்பத்தித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாக பால் உற்பத்தியாளர்களின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...