Newsவாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி

வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி

-

வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து விட்டது. ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்-அப் செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.

பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகளை அவ்வப்போது வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேனல், லோக் சோட் உள்ளிட்ட வசதிகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ‘இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். கைத்தொலைபேசி இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்த வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வசதியின் பயன்கள்:

முன்னதாக ஒருவர் இரண்டு கைத்தொலைபேசிகளில் எண்கள் வைத்திருந்தால் தனி தனியாக இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய வசதியின் மூலம் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

சில சாதனங்களில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருந்ததால் பயனர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். ஒரு சிலர் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த அப்டேட் மூலம் அவர்களின் சிக்கல் தீர்ந்துள்ளது.

இந்த வசதியை வாட்ஸ்அப் அமைப்புகளில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்திற்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...