Newsகுவாண்டாஸ் - ஜெட்ஸ்டார் கட்டணங்கள் 27ம் திகதி முதல் உயரும்

குவாண்டாஸ் – ஜெட்ஸ்டார் கட்டணங்கள் 27ம் திகதி முதல் உயரும்

-

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் மற்றும் அதனுடன் இணைந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆகியவை விமான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்கள் 03 முதல் 3.5 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளன.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக குவாண்டாஸ் குழுமம் அறிவிக்கிறது.

எவ்வாறாயினும், இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட காலம் தொடர்பில் விமானப் பயணச்சீட்டு முகவர் மற்றும் பயண முகவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் அதிகளவான மக்கள் விடுமுறைக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் இந்த கட்டணங்களை அதிகரிப்பது நியாயமற்றது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...