Breaking Newsஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

ஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

-

ஆஸ்திரேலியாவின் அகதி தஞ்ச விசா பொறிமுறையை வலுப்படுத்த புதிதாக 160 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

அகதி தஞ்சம் கோரி தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு மிக நீண்ட காலம் எடுப்பதால் இதை பலர் ஆஸ்திரேலியாவில் தாம் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க பயன்படுத்துவதாகவும், உண்மையிலேயே அகதிகள் அல்லாதவர்களிடம் இருந்து போலி விண்ணப்பங்கள் அதிகளவில் கிடைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை துரித கதியில் பரிசீலித்து இறுதி முடிவை எடுப்பதற்கு 54 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் எனவும், இது உட்பட பல்வேறு நடவடிக்கைகளிக்கென மொத்தம் 160 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

AAT எனப்படும் Administrative Appeals Tribunal-க்கு 10 கூடுதல் நீதிபதிகள் மற்றும் 10 Federal circuit மற்றும் குடும்ப நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் இதில் அடங்குகின்றது.

போலியாக அகதி தஞ்ச விண்ணப்பங்களை தாக்கல் செய்து நீண்ட வரிசையில் விண்ணப்பங்கள் தேங்குவதற்கு காரணமாக இருப்பவர்களால் உண்மையான அகதிகள் பெறுமளவில் பாதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார்.

புகழிட கோரிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த தகுதியும் இல்லாத விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்ய்யப்படும் அகதி தஞ்ச விண்ணப்பங்கள், அவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை உரிமைகளை பெறுவதற்கான ஒரு வழியாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

போலியாக விசா விண்ணப்பங்களை தாக்கல் செய்துவிட்டு அதற்கான முடிவிற்காக காத்திருக்கும் காலம் கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின் மீளாய்வுக்கு விண்ணப்பித்த பின்னர் கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள். அதிலும் நிராகரிக்கப்பட்டபின் நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்து அதன் முடிவுக்காக அதிகபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி நேரிடலாம் என்பதால் இதனை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேலை ஆஸ்திரேலியாவில் தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் 2021 முதல் கணிசமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...

2025 மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் ஆஸ்திரேலியர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் முன்னாள் பிரதமர் Scott Morrison-இற்கு மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து தவிர,...

Mount Hotham பகுதியில் பல மணி நேரம் சிக்கிய 20 பேர் மீட்பு

விக்டோரியாவின் Mount Hotham-இல் மணிக்கணக்கில் கார்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குழு மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் Hotham Heights பகுதியில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு...

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

மெல்பேர்ணில் Airpods மூலம் கண்டுபிடிக்கப்பட்ட திருடப்பட்ட கார்

மெல்பேர்ணைச் சேர்ந்த Kosta Theos என்ற நபருக்குச் சொந்தமான V8 கார், Sunshine மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது திருடப்பட்டது. மருத்துவமனையில் இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு குடும்ப...