Breaking Newsஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

ஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

-

ஆஸ்திரேலியாவின் அகதி தஞ்ச விசா பொறிமுறையை வலுப்படுத்த புதிதாக 160 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

அகதி தஞ்சம் கோரி தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு மிக நீண்ட காலம் எடுப்பதால் இதை பலர் ஆஸ்திரேலியாவில் தாம் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க பயன்படுத்துவதாகவும், உண்மையிலேயே அகதிகள் அல்லாதவர்களிடம் இருந்து போலி விண்ணப்பங்கள் அதிகளவில் கிடைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை துரித கதியில் பரிசீலித்து இறுதி முடிவை எடுப்பதற்கு 54 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் எனவும், இது உட்பட பல்வேறு நடவடிக்கைகளிக்கென மொத்தம் 160 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

AAT எனப்படும் Administrative Appeals Tribunal-க்கு 10 கூடுதல் நீதிபதிகள் மற்றும் 10 Federal circuit மற்றும் குடும்ப நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் இதில் அடங்குகின்றது.

போலியாக அகதி தஞ்ச விண்ணப்பங்களை தாக்கல் செய்து நீண்ட வரிசையில் விண்ணப்பங்கள் தேங்குவதற்கு காரணமாக இருப்பவர்களால் உண்மையான அகதிகள் பெறுமளவில் பாதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார்.

புகழிட கோரிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த தகுதியும் இல்லாத விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்ய்யப்படும் அகதி தஞ்ச விண்ணப்பங்கள், அவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை உரிமைகளை பெறுவதற்கான ஒரு வழியாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

போலியாக விசா விண்ணப்பங்களை தாக்கல் செய்துவிட்டு அதற்கான முடிவிற்காக காத்திருக்கும் காலம் கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின் மீளாய்வுக்கு விண்ணப்பித்த பின்னர் கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள். அதிலும் நிராகரிக்கப்பட்டபின் நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்து அதன் முடிவுக்காக அதிகபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி நேரிடலாம் என்பதால் இதனை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேலை ஆஸ்திரேலியாவில் தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் 2021 முதல் கணிசமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...