Breaking Newsஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

ஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

-

ஆஸ்திரேலியாவின் அகதி தஞ்ச விசா பொறிமுறையை வலுப்படுத்த புதிதாக 160 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

அகதி தஞ்சம் கோரி தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு மிக நீண்ட காலம் எடுப்பதால் இதை பலர் ஆஸ்திரேலியாவில் தாம் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க பயன்படுத்துவதாகவும், உண்மையிலேயே அகதிகள் அல்லாதவர்களிடம் இருந்து போலி விண்ணப்பங்கள் அதிகளவில் கிடைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை துரித கதியில் பரிசீலித்து இறுதி முடிவை எடுப்பதற்கு 54 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் எனவும், இது உட்பட பல்வேறு நடவடிக்கைகளிக்கென மொத்தம் 160 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

AAT எனப்படும் Administrative Appeals Tribunal-க்கு 10 கூடுதல் நீதிபதிகள் மற்றும் 10 Federal circuit மற்றும் குடும்ப நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் இதில் அடங்குகின்றது.

போலியாக அகதி தஞ்ச விண்ணப்பங்களை தாக்கல் செய்து நீண்ட வரிசையில் விண்ணப்பங்கள் தேங்குவதற்கு காரணமாக இருப்பவர்களால் உண்மையான அகதிகள் பெறுமளவில் பாதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார்.

புகழிட கோரிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த தகுதியும் இல்லாத விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்ய்யப்படும் அகதி தஞ்ச விண்ணப்பங்கள், அவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை உரிமைகளை பெறுவதற்கான ஒரு வழியாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

போலியாக விசா விண்ணப்பங்களை தாக்கல் செய்துவிட்டு அதற்கான முடிவிற்காக காத்திருக்கும் காலம் கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின் மீளாய்வுக்கு விண்ணப்பித்த பின்னர் கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள். அதிலும் நிராகரிக்கப்பட்டபின் நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்து அதன் முடிவுக்காக அதிகபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி நேரிடலாம் என்பதால் இதனை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேலை ஆஸ்திரேலியாவில் தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் 2021 முதல் கணிசமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

டெலிகிராமிற்கு $1 மில்லியன் அபராதம் விதித்த ஆஸ்திரேலிய அரசாங்கம்

பயங்கரவாதம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்களைப் புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு டெலிகிராமிற்கு கிட்டத்தட்ட $1 மில்லியன்...

பெரும் ஆபத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் மீனவர்கள்

கோல்ட் கோஸ்ட்டில் காளை சுறாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கடலோரப் பகுதிகளில் மீன் எண்ணிக்கை குறைந்து வருவதாக மீன்வள நிபுணர் லூக்...

$3 மில்லியன் லாட்டரி வெற்றியாளரைக் தேடும் Lotto

நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர் ஒருவர் சமீபத்திய லாட்டரி குலுக்கல்லில் $3 மில்லியன் பரிசை வென்றுள்ளார். இது பிப்ரவரி 22 சனிக்கிழமை நடைபெற்ற லாட்டரி குலுக்கல்லில் இருந்து...

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

வரவிருக்கும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் தொடர்பான இரண்டு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் 24ம் திகதி வெளியிடப்பட்டுள்ளன. Freshwater Strategic Poll மற்றும் Reslove Political Moniter ஆகியவற்றின்...

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

வரவிருக்கும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் தொடர்பான இரண்டு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் 24ம் திகதி வெளியிடப்பட்டுள்ளன. Freshwater Strategic Poll மற்றும் Reslove Political Moniter ஆகியவற்றின்...

உலகின் சிறந்த Coffee Shop உள்ள நாடாக ஆஸ்திரேலியா!

சிட்னியில் உள்ள Toby’s Estate Coffee Roasters உலகின் சிறந்த காபி கடையாக பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த Madrid Coffee விழாவில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. உலகின்...