Newsவிக்டோரியா உட்பட பல மாநிலங்களில் வானிலை மாற்றம்

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் வானிலை மாற்றம்

-

அடுத்த சில நாட்களில் பல மாநிலங்கள் பனிப்பொழிவு, சூறாவளி, கனமழை மற்றும் காட்டுத் தீ போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மக்களை எச்சரித்துள்ளது.

நேற்று விக்டோரியா மாகாணத்தில் மணிக்கு 100 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்றின் வேகம் பதிவாகியிருந்த நிலையில் இன்று விக்டோரியா மாகாணத்தில் வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 900 மீற்றர் வரையில் அமைந்துள்ள பகுதிகளில் இன்று முதல் பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை குறைவாக உள்ளது, மெல்போர்னில் 14 டிகிரி செல்சியஸ், அடிலெய்டில் 15 டிகிரி செல்சியஸ் மற்றும் ஹோபார்ட்டில் 12 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

இருப்பினும், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் இன்று அனல் காற்றும் பலத்த காற்றும் வீசுவதுடன், காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மாநிலம் முழுவதும் காட்டுத் தீ பரவும் அபாயம் இருந்தாலும், வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் காட்டுத் தீ அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வானிலை அறிக்கைகள் தொடர்பில் மக்கள் எப்பொழுதும் கவனம் செலுத்துவது முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...