Newsஇறந்தவர்களின் உடல்களை வைக்க மருத்துவமனைக்குள் இடமில்லை - காஸா

இறந்தவர்களின் உடல்களை வைக்க மருத்துவமனைக்குள் இடமில்லை – காஸா

-

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் 18ஆவது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் விமானங்கள் மூலமாகத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல்.

காஸாவில் குறைந்தது 2 மணி நேரமாகத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது இஸ்ரேல். காஸாவின் மக்கள் திரள் கொண்ட பரபரப்பான சந்தையைத் தகர்த்துள்ளது.

உணவு உள்ளிட்ட பொருள்களுக்கான நெருக்கடி நிலவுகிற நிலையில், எஞ்சியிருக்கும் பொருள்களுக்காக மக்கள் திரளாகச் சேர்கிற சந்தையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே பத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளிடையே இன்னும் பலர் சிக்கியுள்ளனர்.

காஸாவின் தெற்கு பகுதி கான் யூனிஸில், அல்-நாசர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள நுசைரத் பகுதிதான் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. போர் ஆரம்பித்தது முதல் இதே இடத்தில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது.

தாக்குதலில் காயமடைந்தோருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளால் முடியவில்லை. இறந்தவர்களின் உடல்களை வைக்க போதிய இடமில்லாது மருத்துவமனைக்குள்ளேயே தற்காலிக கூடாரங்கள் அமைத்துள்ளார்கள்.

காஸாவின் தெற்கு பகுதி தாக்கப்படுகிற அதே நேரத்தில், வடக்கு பகுதியில் இன்னும் அதிக பலத்தோடு தாக்குதல் தொடரவுள்ளதாகவும் அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பு காரணத்திற்காக தெற்கு நோக்கி இடம்பெயரச் சொல்லி இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்தப் போரில் பயன்படுத்தும் ஆயுதங்களின் வீரியம் மக்களை அதீதமாக பாதித்துள்ளது. தோல் மெழுகு போல் உரிந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இஸ்ரேல் மீது உலக அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.

காஸா மட்டுமில்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகளிலும் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனையும் கைதுசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...