Newsஇறந்தவர்களின் உடல்களை வைக்க மருத்துவமனைக்குள் இடமில்லை - காஸா

இறந்தவர்களின் உடல்களை வைக்க மருத்துவமனைக்குள் இடமில்லை – காஸா

-

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் 18ஆவது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் விமானங்கள் மூலமாகத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல்.

காஸாவில் குறைந்தது 2 மணி நேரமாகத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது இஸ்ரேல். காஸாவின் மக்கள் திரள் கொண்ட பரபரப்பான சந்தையைத் தகர்த்துள்ளது.

உணவு உள்ளிட்ட பொருள்களுக்கான நெருக்கடி நிலவுகிற நிலையில், எஞ்சியிருக்கும் பொருள்களுக்காக மக்கள் திரளாகச் சேர்கிற சந்தையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே பத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளிடையே இன்னும் பலர் சிக்கியுள்ளனர்.

காஸாவின் தெற்கு பகுதி கான் யூனிஸில், அல்-நாசர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள நுசைரத் பகுதிதான் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. போர் ஆரம்பித்தது முதல் இதே இடத்தில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது.

தாக்குதலில் காயமடைந்தோருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளால் முடியவில்லை. இறந்தவர்களின் உடல்களை வைக்க போதிய இடமில்லாது மருத்துவமனைக்குள்ளேயே தற்காலிக கூடாரங்கள் அமைத்துள்ளார்கள்.

காஸாவின் தெற்கு பகுதி தாக்கப்படுகிற அதே நேரத்தில், வடக்கு பகுதியில் இன்னும் அதிக பலத்தோடு தாக்குதல் தொடரவுள்ளதாகவும் அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பு காரணத்திற்காக தெற்கு நோக்கி இடம்பெயரச் சொல்லி இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்தப் போரில் பயன்படுத்தும் ஆயுதங்களின் வீரியம் மக்களை அதீதமாக பாதித்துள்ளது. தோல் மெழுகு போல் உரிந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இஸ்ரேல் மீது உலக அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.

காஸா மட்டுமில்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகளிலும் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனையும் கைதுசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

குழந்தை பாலினத்தை தெரிந்துகொள்ள அமெரிக்கா செல்லும் மெல்பேர்ண் தாய்

மென்பேர்ண் நகரத்திலிருந்து தனது பிறக்காத குழந்தையின் பாலினத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா சென்ற ஒரு தாய் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த தாய்க்கு Instagram-இல் 60,000 க்கும் மேற்பட்ட...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...