Newsஇனி பாடங்களில் தோல்வியடைந்த கல்லூரி மாணவர்களும் மாணவர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

இனி பாடங்களில் தோல்வியடைந்த கல்லூரி மாணவர்களும் மாணவர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

-

தேர்வில் தோல்வி அடையும் பல்கலைக் கழக மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதை தடுக்கும் விதிகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பல தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், அன்றைய ஸ்காட் மாரிசன் அரசாங்கத்தால், அவர்கள் படிக்கும் பாடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய பணியாளர்களில் பட்டம் பெற்றவர்களின் சதவீதம் 2050 க்குள் தற்போதைய 36 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மண்டல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி தடைகளை நீக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

இது தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை வருட இறுதிக்குள் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட உள்ளது.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...