NewsQLD - வைக்கோல் பற்றாக்குறையால் NSW விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி

QLD – வைக்கோல் பற்றாக்குறையால் NSW விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி

-

காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ள நிலையில், வைக்கோல் தட்டுப்பாட்டினால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் கால்நடைத் தொழில் தொடர்பான விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கால்நடைகளுக்கு உணவளிக்க தேவையான வைக்கோலை கொள்வனவு செய்வதற்கு மாதம் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விவசாயிகளுக்கு உதவ விரும்புவோர் 1300 327 624 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக இருப்பதால், வைக்கோலின் தேவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ அபாயம் காரணமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுமார் 50 வீடுகள் ஏற்கனவே முற்றாக அழிந்து விட்டதாகவும், தீயை அணைக்கும் பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்றின் அபாயம் தொடர்வதோடு, தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...