Newsஇணைய மோசடி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் செயலிழக்கப்படும் MyGov கணக்குகள்

இணைய மோசடி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் செயலிழக்கப்படும் MyGov கணக்குகள்

-

அங்கீகரிக்கப்படாத அணுகல் சந்தேகத்தின் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான MyGov கணக்குகள் முடக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

சென்டர்லிங்க் – மெடிகேர் மற்றும் ஆஸ்திரேலிய வரி அலுவலகச் சேவைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கணக்குகளும் இதில் அடங்கும்.

இந்த ஆண்டு பல்வேறு ஆன்லைன் மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் 3.1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக அரசாங்க சேவைகள் அமைச்சர் பில் ஷார்டன் கூறுகிறார்.

MyGov கணக்குகள் தொடர்பான 4500 மோசடிகள் அவற்றில் அடங்கும் என்று அவர் கூறினார்.

இந்த இணையத் தாக்குதல்களில் பலவற்றின் மூலக் காரணம், ஆஸ்திரேலியர்கள் மிகவும் எளிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதும், பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதும் ஆகும்.

இதேவேளை, பல மாநிலங்களில் வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இரு போலிஷ் மற்றும் ரோமானிய சந்தேக நபர்கள் குயின்ஸ்லாந்தில் இருந்து விக்டோரியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

22 வயதான மற்றும் 35 வயதான இருவரும் இன்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

44 வழக்குகளில் இவர்கள் செய்த மொத்த மோசடி தொகை கிட்டத்தட்ட 102,000 டாலர்கள் என்று கூறப்படுகிறது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...