Newsஇணைய மோசடி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் செயலிழக்கப்படும் MyGov கணக்குகள்

இணைய மோசடி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் செயலிழக்கப்படும் MyGov கணக்குகள்

-

அங்கீகரிக்கப்படாத அணுகல் சந்தேகத்தின் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான MyGov கணக்குகள் முடக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

சென்டர்லிங்க் – மெடிகேர் மற்றும் ஆஸ்திரேலிய வரி அலுவலகச் சேவைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கணக்குகளும் இதில் அடங்கும்.

இந்த ஆண்டு பல்வேறு ஆன்லைன் மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் 3.1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக அரசாங்க சேவைகள் அமைச்சர் பில் ஷார்டன் கூறுகிறார்.

MyGov கணக்குகள் தொடர்பான 4500 மோசடிகள் அவற்றில் அடங்கும் என்று அவர் கூறினார்.

இந்த இணையத் தாக்குதல்களில் பலவற்றின் மூலக் காரணம், ஆஸ்திரேலியர்கள் மிகவும் எளிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதும், பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதும் ஆகும்.

இதேவேளை, பல மாநிலங்களில் வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இரு போலிஷ் மற்றும் ரோமானிய சந்தேக நபர்கள் குயின்ஸ்லாந்தில் இருந்து விக்டோரியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

22 வயதான மற்றும் 35 வயதான இருவரும் இன்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

44 வழக்குகளில் இவர்கள் செய்த மொத்த மோசடி தொகை கிட்டத்தட்ட 102,000 டாலர்கள் என்று கூறப்படுகிறது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...