Sportsஇலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் - உலக கிண்ண தொடர் 2023

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் – உலக கிண்ண தொடர் 2023

-

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலன்க 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் தன்சிம் ஹசன் சாகிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஷகிப் அல் ஹசன் 57 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 69 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நன்றி தமிழன்

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...