Newsமூளையை தாக்கும் கொடிய வைரஸ் - பாகிஸ்தானில் ஒருவர் பலி

மூளையை தாக்கும் கொடிய வைரஸ் – பாகிஸ்தானில் ஒருவர் பலி

-

பாகிஸ்தான் கராச்சியில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ என்றழைக்கப்படும் ‘நாகிலேரியா ஃபோலேரி’ ((Naegleria fowler) அமீபா, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சிந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இறந்த நோயாளி காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் மொத்தம் 3 பேர் இந்த அமீபாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து மூளைத்திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சரான டொக்டர்.சாத் காலித், நன்னீர் ஆகாரங்களில் காணப்படும் இந்த அமீபாவிடமிருந்து தங்களைக் காக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அமீபாவால் தாக்கப்படுவது அரிது என்றாலும் இது எளிதில் உயிரைப் பறிக்கக்கூடியது என்பதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அனையவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மக்கள் சுத்தம் செய்யப்படாத, ஒழுங்காக குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...