Newsமூளையை தாக்கும் கொடிய வைரஸ் - பாகிஸ்தானில் ஒருவர் பலி

மூளையை தாக்கும் கொடிய வைரஸ் – பாகிஸ்தானில் ஒருவர் பலி

-

பாகிஸ்தான் கராச்சியில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ என்றழைக்கப்படும் ‘நாகிலேரியா ஃபோலேரி’ ((Naegleria fowler) அமீபா, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சிந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இறந்த நோயாளி காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் மொத்தம் 3 பேர் இந்த அமீபாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து மூளைத்திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சரான டொக்டர்.சாத் காலித், நன்னீர் ஆகாரங்களில் காணப்படும் இந்த அமீபாவிடமிருந்து தங்களைக் காக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அமீபாவால் தாக்கப்படுவது அரிது என்றாலும் இது எளிதில் உயிரைப் பறிக்கக்கூடியது என்பதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அனையவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மக்கள் சுத்தம் செய்யப்படாத, ஒழுங்காக குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...