Sportsமேக்ஸ்வெல்லின் அசாத்திய இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா அபார வெற்றி - உலக...

மேக்ஸ்வெல்லின் அசாத்திய இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண தொடரின் 39வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ஓட்டங்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ஒட்டத்துடனும், ரஷித் கான் 35 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 292 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது.

டிராவிஸ் ஹெட் டக் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ஓட்டத்துடன் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார். இதனால் அவுஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களை எடுத்து திணறியது.

லபுசேன் 14 ஓட்டத்துடனும், ஸ்டோய்னிஸ் 6 ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டார்க் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி சதமடித்தார். அவருக்கு அணி தலைவர் பாட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 293 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 201 ஓட்டங்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...