Breaking Newsநியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

நியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

-

தமிழகத்தின் தொன்மைத்துறை முகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு?

New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது அதுவும் கையுறை அணிந்து கொண்டு.

இந்த மணியின் வயது? 15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கிய போது ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான ‘மெளரி’ இனத்து மக்கள் இது என்னவென்று தெரியமால் உணவு தயாரிக்க இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம்.

நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.William Colenso இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளார்.

166mm உயரமும், 155mm சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ்மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது.

இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள வரி-‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’ இஸ்லாமியராயினும் தம் தாய் மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்ற போது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.

B.H.Abdul Hameed

Latest news

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...

2025 ஆம் ஆண்டுக்குள் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள்

இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நுகர்வோர் செலவு $280 மில்லியனை எட்டும் என்று ANZ எதிர்பார்க்கிறது. 2024 உடன் ஒப்பிடும்போது இது...

வேலை வெட்டுக்கு தயாராகும் Telstra நிறுவனம்

வணிகம் முழுவதும் மற்றொரு சுற்று பெருமளவிலான வெட்டுக்கள் பரிசீலிக்கப்படுவதை Tesla உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் முதலில் ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று வலியுறுத்துகிறது. இன்று, நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின்...

விக்டோரியாவில் வீட்டுவசதி கட்டுமானம் குறித்த சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, மே 2025 இல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 3.2% அதிகரித்து 15,212 ஆக உள்ளது. தனியார்...

மெல்பேர்ண் ரயில் பாதைகளில் தீ விபத்து

மெல்பேர்ண் நகர மையத்தில் உள்ள ரயில் பாதையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரயில் சேவைகள் தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு மெல்பேர்ணின் Rosslyn தெரு...

ஆஸ்திரேலியாவில் மூடப்பட்ட இரண்டு பெரிய வேர்க்கடலை தொழிற்சாலைகள்

Bega குழுமம் அதன் Peanut தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சுமார் 150 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குயின்ஸ்லாந்தின் Kingaroy மற்றும்...