Breaking Newsதடுப்புக் காவலிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை விடுவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என...

தடுப்புக் காவலிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை விடுவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டுகள்!

-

தடுப்புக் காவலில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் குழுவை விடுவிப்பது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூட்டாட்சி எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.

விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களும் உள்ளடங்குவதாக குடிவரவு அமைச்சர் டான் டெஹான் வலியுறுத்துகிறார்.

கடந்த புதன்கிழமை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் தடுப்புக்காவலில் இருந்த 80 புலம்பெயர்ந்தோரை எந்தவித விசாரணையும் இன்றி விடுதலை செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை காலவரையறையின்றி காவலில் வைப்பது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறையும் எல்லைப் பாதுகாப்புப் படையும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 340 பேர் எதிர்வரும் காலங்களில் அதிகாரிகளால் விடுவிக்கப்பட உள்ளனர்.

சராசரியாக, குடிவரவு கைதிகள் 708 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 124 புலம்பெயர்ந்தோர் தற்போது 05 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய புகலிட மையம் அறிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...