Newsஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைபற்றினர் இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைபற்றினர் இஸ்ரேல் இராணுவம்

-

காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று கைப்பற்றியது.

பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி ஏவுகணை குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினர். அதன்பின் தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலியர்கள் 1,200 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர்.

இதனால் இஸ்ரேல் இராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் காசாவின் வட பகுதியில் சுமார் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

காசா எல்லையில் பீரங்கி வாகனங்களுடன் காத்திருந்த இஸ்ரேல் இராணுவம், காசாவின் வட பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊடுருவியது. இஸ்ரேல் விமானப்படை ஹமாஸ் போராளிகளின் இருப்பிடங்களில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் தரைப்படை படிப்படியாக முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வந்தது.

காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகளையும் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்கினர். காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்-குத் மருத்துவமனைக்கு வெளியே ஏவுகணைகளுடன் பாதுகாப்பு பணியில் இருந்த ஹமாஸ் போராளிகள் 24 பேரை இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் காமிஸ் தபாபாஸ், சீனியர் கமாண்டர் தஷின் மஸ்லாம் உட்பட ஹமாஸ் படையின் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் இராணுவத்தினர் கைப்பற்றி உள்ளே புகுந்தனர். காசாவின் வடபகுதியில் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

காசா நகரத்தில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள், குடிநீர், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்கு இன்குபேட்டர் வசதி மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆனால், மின்சாரம் இன்றி அவற்றின் செயல்பாடு முடங்கியுள்ளதால் குழந்தைகளை வெளியில் எடுத்து வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, மனித உயிர்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதால் 7 குழந்தைகள் உட்பட 179 சடலங்கள் ஒரே இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

நன்றி தமிழன்

Latest news

Buy Now Pay Later-இல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்

தீங்கு விளைவிக்கும் கடன் ஒப்பந்தங்களால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால், Buy Now Pay Later வழங்குநர்களுக்கு பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஜூன்...

Qatar Airways-உடன் இணைந்து வானில் பறக்க்கும் Virgin Australia

Qatar Airways-உடனான கூட்டாண்மை மூலம் நீண்ட தூர சந்தையில் மீண்டும் நுழைவதன் மூலம் Virgin Australia சர்வதேச அரங்கிற்குத் திரும்பத் தயாராகி வருகிறது. ஜூன் 12, 2025...

குயின்ஸ்லாந்தில் பிரபலமடைந்துவரும் Osteoporosis தடுப்பு உடற்பயிற்சி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பெரியவர்களிடையே எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் Osteoporosis-ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் குறைந்த எலும்பு...

குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 4 நாட்களாக போராடும் பொதுமக்கள்

டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது நான்காவது நாளாகத் தொடர்கின்றன. போராட்டக்காரர்களை அடக்க சுமார் 300 மத்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தைக்...

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற Greta Thunberg கைது

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான Madleen-இல் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg கூறியுள்ளார்....

G7 மாநாட்டின் போது அல்பானீஸ் மற்றும் டிரம்ப் இடையே சந்திப்பை அமைக்க அழுத்தம்

இந்த வாரம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று  கூட்டணித் தலைவர்கள் கூறுகின்றனர். உலகத் தலைவர்கள் கனடாவில் நடைபெறும் G7...