Sportsஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா - உலக கிண்ண தொடர்...

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா – உலக கிண்ண தொடர் 2023

-

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபடியாக விராட் கோலி 117 ஓட்டங்களை பெற்றதுடன், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும் சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் Tim Southee 3 விக்கெட்டுக்களையும், Trent Boult 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதற்கமைய, 398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் Daryl Mitchell அதிகபட்சமாக 134 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் Kane Williamson 69 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mohammed Shami 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி இந்திய அணி இந்த ஆண்டுக்கான உலக கிண்ண தொடரில் முதலாவது அணியாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

அதேநேரம் நாளைய தினம் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள Australia Post

Australia Post ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள்Australia Post இருந்து வரும் தொடர்ச்சியான மோசடி மின்னஞ்சல்களைப் பற்றியது. தவறான அஞ்சல் குறியீடு காரணமாக...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் மூவரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின...

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பு விகிதத்தில் திடீர் அதிகரிப்பு

தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகமான ஆஸ்திரேலியர்கள் பணியில் இணைந்துள்ளமையால், ஆண்டின் மென்மையான தொடக்கத்தை சரிசெய்கிறது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆஸ்திரேலியாவில் வேலை தேடும் 20,000 பேர்...