Breaking Newsசெல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

-

கடந்த வாரம் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகள் செல்லுபடியாகும் வீசா எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஊடக அமைப்பு ஒன்றின் விசாரணை அறிக்கையின்படி, அவர்களில் சிலருக்கு வழங்கப்பட்ட கடிதங்களில் அவர்கள் தற்காலிக அனுமதியின் பேரில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் செல்லுபடியாகும் விசா அனுமதி அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் மற்றும் ஏனைய அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட 83 பேரில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

அவர்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருப்பதாகவும் குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எந்தவொரு விசா அல்லது விசா நிபந்தனைகளும் இன்றி கடிதம் மாத்திரம் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினையாக உள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...