Breaking Newsசெல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

-

கடந்த வாரம் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகள் செல்லுபடியாகும் வீசா எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஊடக அமைப்பு ஒன்றின் விசாரணை அறிக்கையின்படி, அவர்களில் சிலருக்கு வழங்கப்பட்ட கடிதங்களில் அவர்கள் தற்காலிக அனுமதியின் பேரில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் செல்லுபடியாகும் விசா அனுமதி அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் மற்றும் ஏனைய அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட 83 பேரில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

அவர்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருப்பதாகவும் குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எந்தவொரு விசா அல்லது விசா நிபந்தனைகளும் இன்றி கடிதம் மாத்திரம் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினையாக உள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...