Newsதேசிய அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கோரிக்கை

தேசிய அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கோரிக்கை

-

இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி குறித்து விவாதிக்க தேசிய அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழிற்கட்சி அரசாங்கத்துக்குள்ளும், அரச தலைவர்கள் மத்தியிலும் இது குறித்து முரண்பட்ட கருத்தியல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் யூத வம்சாவளியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறார்.

உலகின் அனைத்து முக்கிய நாடுகளும் இந்த நெருக்கடி தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய மத்திய அரசின் கருத்து தெளிவாக இல்லை என்று பீட்டர் டட்டன் வலியுறுத்துகிறார்.

பாலஸ்தீனத்தின் மீது பாரிய தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் அச்சுறுத்திய சில மணி நேரங்களிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

Latest news

திரும்பப் பெறப்பட்ட Tesla வாகனங்கள் 

மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் ஜெசிந்தா ஆலன்

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் வலியுறுத்துகிறார். இருப்பினும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலப் பிரதமரின் வாக்குறுதி வார்த்தைகளுக்குள் மட்டுமே...

பிரிஸ்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிஸ்பேர்ண் உட்பட குயின்ஸ்லாந்து மக்கள் ஆல்ஃபிரட் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி குயின்ஸ்லாந்து கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்று...