Newsதோல்வியடைந்த 50 கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்திவைப்பு

தோல்வியடைந்த 50 கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்திவைப்பு

-

50 கட்டுமானத் திட்டங்களுக்கான நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இது சுயாதீன மதிப்பாய்வு மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் கேத்தரின் கிங் சமர்பித்த அறிக்கைகளின்படி, திட்டப்பணிகள் முறையான திட்டமிடல் இன்றி அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் உள்ளன.

மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மேலும் 400 உள்கட்டமைப்பு திட்டங்களின் சாத்தியக்கூறு ஆய்வுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் போதிய நிதியில்லாத திட்டங்களுக்கு முறையான மதிப்பீடு இன்றி வேண்டுமென்றே பணம் செலவிடப்பட்டதாக அமைச்சர் கேத்தரின் கிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலை மேலும் நாட்டை பொருளாதார அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளதுடன் தற்போதைய அரசாங்கம் புதிய மீளாய்வு அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எனவும் கேத்தரின் கிங் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அனைத்து உட்கட்டமைப்பு திட்டங்களும் எவ்வித வெட்டுமின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்த போதிலும், மீளாய்வு தரவுகளில் குறைபாடுகள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனிடையே, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான செலவினங்களில் மத்திய அரசின் பங்களிப்பை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்க போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் கேத்தரின் கிங் சமீபத்தில் முடிவு செய்திருந்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...