Newsஅமேசானில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்

அமேசானில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்

-

அமேசான் நிறுவனம் அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது.

கொரோனா காலத்திற்குப் பின்னர் பிரபல நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அலெக்ஸா பிரிவின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கோடிக்கும் அதிகமான அலெக்ஸா கருவிகளை அமேசான் விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அமேசான் ஊழியர்கள் வேலை இழக்கின்றனர்.

முன்னதாக கடந்த வாரம், அமேசான் தனது இசை மற்றும் கேமிங் பிரிவுகளிலும், சில மனிதவளப் பணிகளிலும் வேலைக் குறைப்புகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...