Newsஉலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா அழகி தெரிவு

உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா அழகி தெரிவு

-

எல் சல்வடார் நாட்டில் இடம்பெற்ற 72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்றார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று எல் சால்வடோர் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடந்தது. இதில் முதல் 20 பேரில் இந்திய அழகி இடம் பெற்றார். ஆனால் இறுதி 5 பேரில் அவர் தேர்வாகவில்லை.

நிகரகுவா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட பிறகு பட்டத்துக்காக இறுதிச் சுற்றுக்கு நிகரகுவா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா அழகிகள் நுழைந்தனர். இறுதிச் சுற்றில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதன் பின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.

இறுதிச் சுற்றில் ஷெய்னிஸிடம் நீங்கள் மற்றொரு பெண்ணாக ஒரு வருடம் வாழ முடிந்தால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் 18-ம் நூற்றாண்டின் இங்கிலாந்து தத்துவாஞானியும் பெண்ணியவாதியுமான மேரி வோல்ஸ் போன்கிராப்டாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். அவர் எல்லைகளை உடைத்து பல பெண்களுக்கு வாய்ப்பளித்தார். இன்று பெண்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று ஷெய்னிஸ் கூறினார்.

2-வது இடத்தை தாய்லாந்து அன்டோனியா போர்சில்ட்டும், 3-வது இடத்தை அவுஸ்திரேலியாவின் மொராயா வில்சனும் பிடித்தனர்.

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ள 23 வயதான ஷெய்னிஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மோடல் ஆவார்.

நன்றி தமிழன்

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...