Newsசீன ஜனாதிபதியுடன் என்ன கலந்துரையாடினார் என்பதை வெளிப்படுத்துமாறு பிரதமரிடம் கோரியுள்ள எதிர்க்கட்சித்...

சீன ஜனாதிபதியுடன் என்ன கலந்துரையாடினார் என்பதை வெளிப்படுத்துமாறு பிரதமரிடம் கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்

-

கடந்த வாரம் 02 தடவைகள் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான சரியான தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் பீற்றர் டட்டன் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன கடற்படையின் சோதனையின் போது ஆஸ்திரேலிய ராயல் நேவி டைவர்ஸ் குழுவின் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று பல நாட்களாகியும் பிரதமர் அல்பானீஸ் அல்லது தொழிற்கட்சி அரசாங்கமோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாதது பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இது முழு நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் பீட்டர் டட்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் இராணுவ நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா என்று பிரதமர் அல்பனீஸிடம் அவர் மேலும் கேட்கிறார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...