Newsதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம்

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம்

-

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, கோயில் மூலவா் சந்நிதியில் அதிகாலை 3.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இவற்றை இலட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நடப்பாண்டுக்கான மகா தீபத் திருவிழா கடந்த 17-ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பஞ்ச ரதங்களின் தேரோட்டம்: கடந்த 22-ஆம் திகதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ஆம் திகதி அதிகாலை முதல் 24-ஆம் திகதி அதிகாலை 3 மணி வரை விநாயகா், முருகன், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றது.

பரணி தீபம்: தீபத் திருவிழாவின் 10-ஆவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

அதிகாலை 2.45 மணி முதல் 3.20 மணி வரை பரணி பூஜை நடைபெற்றது. சரியாக 3.30 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மூலவா் சந்நிதி எதிரே உள்ள பிரதோஷ மண்டபத்தில் பிரதோஷ நந்திக்கு வலப்புறம் பஞ்ச (ஐந்து) மடக்குகளை வைத்து சிவாச்சாரியா்கள் தீபம் ஏற்றி, மடக்குப் பூஜை செய்தனா்.

பின்னா், கோயில் 2-ஆவது பிரகாரத்தில் கூடியிருந்த பக்தா்களுக்கு பரணி தீபம் காண்பிக்கப்பட்டது. மேலும், இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்த பரணி தீபம், உண்ணாமுலையம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 5 மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, கோயில் 3-ஆவது பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகா் சந்நிதி, நடராஜா், சின்ன நாயகா், வேணுகோபால் சுவாமி உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட பரணி தீபம் காலை 6.30 மணிக்கு சொா்ண பைரவா் சந்நிதியில் நிறைவு பெற்றது.

தீபத் திரி மலைக்குப் பயணம்: காலை 10 மணிக்கு கோயில் பிரம்ம தீா்த்தக் குளத்தில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றத் தேவையான திரியை (காடா துணி) தீப நாட்டாா் சமூகத்தினா் எடுத்துச் சென்றனா்.

அா்த்தநாரீஸ்வரராக காட்சியளித்த சிவன்: மாலை 5 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரம், கொடிமரம் எதிரே உள்ள தீப தரிசன மண்டபத்துக்கு பஞ்ச மூா்த்திகளின் தங்க விமானங்கள் கொண்டுவரப்பட்டன.

மாலை 5.30 மணிக்கு சுவாமி சந்நிதியில் இருந்து எழுந்தருளிய உற்சவா் பஞ்சமூா்த்திகள் ஒருவா்பின் ஒருவராக பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

மாலை 5.50 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி பின்புறம் இருந்து அா்த்தநாரீஸ்வரா் கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளினாா். இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்த அவா், மாலை 6 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகளுக்கு காட்சியளித்தாா்.

2,668 அடி உயர மலையில் மகா தீபம்: அப்போது, பரணி தீப மடக்குகளை தீபநாட்டாா் சமூகத்தினா் சுமந்து வந்து தங்கக் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்தில் சோ்த்தனா். தொடா்ந்து, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான சமிக்ஞை, வைகுந்த வாசல் வழியாக காட்டப்பட்டது.

உடனே, மலை மீது மகா தீபமும், சுவாமி சந்நிதி எதிரே அகண்ட தீபமும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டதும் கோயில், திருவண்ணாமலை நகரம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கூடியிருந்த 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சரண கோஷங்களுடன் தரிசித்தனா்.

இந்த நிகழ்வில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

பஞ்ச மூா்த்திகள் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

இன்று தெப்பல் திருவிழா தொடக்கம்:

தீபத் திருவிழாவின் தொடா் நிகழ்ச்சியாக, திங்கள்கிழமை (நவ.27) இரவு 9 மணிக்கு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவமும், செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், புதன்கிழமை இரவு ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.

அண்ணாமலையாா் கிரிவலம்:

செவ்வாய்க்கிழமை (நவ.28) அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கிரிவலம் நடைபெறும். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் அருணாசலேஸ்வரா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

தீபத் திருவிழா நிறைவு: வியாழக்கிழமை இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரா் வீதியுலா நடைபெறும். இத்துடன் இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் உ.மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராஜாராம், கு.கோமதி குணசேகரன், இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Latest news

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆஸ்திரேலிய நகரங்களில் "What Were You Wearing?" என்ற அமைப்பு ஏராளமான போராட்டங்களை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அனைத்து...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...