Canberraஅடுத்த சில வாரங்களில் சிட்னி - மெல்போர்ன் - கான்பெராவில் கனமழை...

அடுத்த சில வாரங்களில் சிட்னி – மெல்போர்ன் – கான்பெராவில் கனமழை பெய்யும்

-

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கன்பரா ஆகிய 03 முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் போதிய மழையின்றி தவித்து வந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலை காணாமல் போகும் என கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இந்த நாட்களில் 100 முதல் 200 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்துள்ளதாகவும் பயிர்களுக்கு போதியளவு நீர் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் நாளை பிற்பகல் முதல் ஒரு வாரத்திற்கும் மேலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...