Canberraஅடுத்த சில வாரங்களில் சிட்னி - மெல்போர்ன் - கான்பெராவில் கனமழை...

அடுத்த சில வாரங்களில் சிட்னி – மெல்போர்ன் – கான்பெராவில் கனமழை பெய்யும்

-

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கன்பரா ஆகிய 03 முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் போதிய மழையின்றி தவித்து வந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலை காணாமல் போகும் என கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இந்த நாட்களில் 100 முதல் 200 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்துள்ளதாகவும் பயிர்களுக்கு போதியளவு நீர் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் நாளை பிற்பகல் முதல் ஒரு வாரத்திற்கும் மேலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...