Canberraஅடுத்த சில வாரங்களில் சிட்னி - மெல்போர்ன் - கான்பெராவில் கனமழை...

அடுத்த சில வாரங்களில் சிட்னி – மெல்போர்ன் – கான்பெராவில் கனமழை பெய்யும்

-

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கன்பரா ஆகிய 03 முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் போதிய மழையின்றி தவித்து வந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலை காணாமல் போகும் என கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இந்த நாட்களில் 100 முதல் 200 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்துள்ளதாகவும் பயிர்களுக்கு போதியளவு நீர் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் நாளை பிற்பகல் முதல் ஒரு வாரத்திற்கும் மேலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...