Breaking Newsதற்போதைய அரசாங்கத்தின் கீழ் 50% ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தில் உள்ளனர்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 50% ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தில் உள்ளனர்

-

சமீபத்திய நியூஸ்போல் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுமார் 50 சதவீத ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,216 வாக்காளர்களைப் பயன்படுத்தி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து வயதினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

35 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் இரண்டு வருட நெருக்கடியை அடுத்து நிதி அழுத்தத்தில் இருப்பதாகக் கூறினர்.

கட்டுப்படியாகாத வாடகை வீட்டு விலைகள், அடமானச் செலவுகள், வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவில், 56 சதவீத வாடகைதாரர்களும், அடமானத்தில் பணம் செலுத்துபவர்களில் 53 சதவீதமும் கடுமையான நிதி அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2 வருடங்களுடன் ஒப்பிடுகையில் பெண்ணின் நிதி அழுத்தமானது 53 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் ஆண்களின் நிதி அழுத்தங்கள் 48 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மீதான மக்களின் நம்பிக்கை 40 சதவீதமாக குறைந்துள்ளதாக சமீபத்திய நியூஸ்போல் சர்வே அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...