Newsபத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம்

பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம்

-

பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டிவருகிறார் அமேசான் நிறுவனத்தின் நிறுவுனர் ஜெப் பசோஸ். 500 அடி உயரம் கொண்ட இந்தக் கடிகாரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மலை ஒன்றுக்குள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சுமார் 1400 கோடி ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிகாரத்திற்கானத் திட்டம் டேனி ஹில்லிஸ் எனும் அறிவியலாளருடையது. இந்தக் கடிகாரத்திற்கு க்ளொக் ஒப் த லோங் (Clock of the Long) எனப் பெயரிட்டுள்ளனர். மேலும் இந்தக் கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மணியளவின் படி இந்தக் கடிகாரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வையிட வரும்போது, தங்கள் பெயரும் இந்த கடிகாரத்தைப் போலக் காலம் கடந்து நிற்க வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற வேண்டும் எனவும் விரும்புவதாக கடிகாரக் கட்டுமானத் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

முதலில் இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்தக் கடிகாரம் என அந்நிறுவனம் தனது வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளது.

இந்தக் கடிகாரத்தின் முதல் ஒலி இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரே கேட்கும் என்ற நிலையில், அதனைக் கேட்கப்போகும் உயிர்களை உருவாக்கும் உயிர்கள் கூட இன்னும் உருவாகவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

வேலைகள் மற்றும் தாய்மையைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா பல வசதிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கான வேலைப் பாதுகாப்பு மற்றும் விடுப்பு உரிமைகள் குறித்து நியாயமான பணி குறைதீர்ப்பாளன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய வேலைவாய்ப்பு தரநிலைகளின்படி, கர்ப்ப காலத்தில் ஊதியம்...

MATES விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் MATES விசாவிற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமக்கள் முதலில் வாக்களிக்கப் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Mobility Arrangement for Talented Early-professionals...

 முதல் முறையாக ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள விஸ்வாஸ்குமார்

ஜூன் மாதம் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வஷ்குமார் ரமேஷ், முதல் முறையாக ஊடகங்களுக்குப் பேட்டி...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...