Newsஉலகின் 8 வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு

உலகின் 8 வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு

-

தென்கிழக்கு ஆசியாவில் கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக உள்ள அங்கோர் வாட் கோயில், உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அங்கோர் வாட் உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது.

உலகில் அறிமுகமே தேவையில்லாத இடங்களில் இதுவும் ஒன்று. கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோயில் உலகில் அதிகமான பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

கம்போடியாவின் மையப்பகுதியில் உள்ள அங்கோர் வாட், இத்தாலியின் பாம்பீயைப் பின்னுக்குத் தள்ளி உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பாம்பீக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைவிட அங்கோர் வாட்டுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம்.

உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கீகாரம் ஆகும். இத்தாலியின் பாம்பீயிடம் இருந்து அந்த இடத்தை அங்கோர் வாட் தட்டப் பறித்துள்ளது.

அங்கோர் வாட் கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இது முதலில் இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கோவிலாகக் கட்டப்பட்டது. பின்னர் புத்த மதத்தின் முக்கிய கோவிலாக மாறியது.

அங்கோர் என்றால் எட்டுக் கைகளையுடைய விஷ்ணுவைக் குறிக்கும். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை கோவில் சுவர்களிலும் சிற்பங்களிலும் காணமுடிகிறது.

நன்றி தமிழன்

Latest news

திரும்பப் பெறப்பட்ட Tesla வாகனங்கள் 

மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் ஜெசிந்தா ஆலன்

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் வலியுறுத்துகிறார். இருப்பினும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலப் பிரதமரின் வாக்குறுதி வார்த்தைகளுக்குள் மட்டுமே...

பிரிஸ்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிஸ்பேர்ண் உட்பட குயின்ஸ்லாந்து மக்கள் ஆல்ஃபிரட் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி குயின்ஸ்லாந்து கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்று...