Newsநீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை படைத்தார் இந்தியப்பெண்

நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை படைத்தார் இந்தியப்பெண்

-

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா சிறு வயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு முடியை பராமரிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

சிறுவயதில் குழந்தைகளுக்கு முடியை வெட்டி விடுவது வழக்கம் அதன்படி, ஸ்மிதாவுக்கும் சிறு வயதில் முடியை வெட்டினாலும் 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதைத் தவிர்த்ததனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலமாக உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

1980களில் இந்தி நடிகைகள் நீளமான முடி அலங்காரத்தால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்கத் தொடங்கிய ஸ்மிதா, இப்போது நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

பெண்களுக்கு அழகே நீண்ட தலைமுடிதான் எனக் கூறும் ஸ்மிதா, வாரத்திற்கு 2 நாட்கள் தலைமுடியை சுத்தம் செய்வதுடன் முடியை சுத்தம் செய்தல், உலர்த்துதல், சிக்கல் எடுத்தல் மற்றும் பின்னுதல் என இந்த நடைமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரமாவதாக கூறியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...