Newsசிறுநீரக நோய்க்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கிடைக்காததால் பழங்குடியின மக்கள் அவதி

சிறுநீரக நோய்க்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கிடைக்காததால் பழங்குடியின மக்கள் அவதி

-

சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தட்டுப்பாடு காரணமாக தென் குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.

இந்நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும், தேவையான மருத்துவ வசதிகள் தாயக மக்களிடையே இல்லை எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது சிறுநீரக தொற்று காரணமாக 06 தாயகப் பிள்ளைகளின் நிலை மோசமாகியுள்ளதோடு, நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளுக்கு வேறு பக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதற்கான போக்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுநீரக நோய் அபாயம் என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலையாகும், இது நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுகாதார சேவைகள் இயக்குனர் எஃப்-சன் கிங் கூறினார்.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு குறைந்த முன்னுரிமை அளிக்கப்பட்டு, தேவையான இருப்புகளை பராமரிக்க முடியாததே இதற்குக் காரணம்.

இதேவேளை, நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தட்டுப்பாடு உலகளாவிய பிரச்சினையாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள சுகாதார அதிகாரிகள், நாட்டில் நம்பகமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக பூர்வீக சமூகத்தினரிடையே நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அறிவு இல்லாமை நோய் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...