News1000 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்துவிழும் அபாயத்தில்!

1000 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்துவிழும் அபாயத்தில்!

-

இத்தாலியின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக கரிசெண்டா சாய்ந்த கோபுரம் திகழ்கிறது.
900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோபுரம் கடந்த சில ஆண்டுகளாக, படிப்படியாக சாயத் தொடங்கியதையடுத்து அறிவியல் ஆய்வுக்குழுவினர் இந்த கோபுரத்தை ஆய்வு செய்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு முதல் தளத்தை கண்காணித்த அறிவியல் குழுவினர், சமீபத்தில் 27 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், கோபுரத்தின் தன்மை மோசமாக இருப்பதாகவும், இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான சென்சார் அளவீடுகள், இந்த எச்சரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
கோபுரம் தற்போது 4 பாகை கோணத்தில் சாய்ந்துள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலியின் மிகவும் பிரபலமான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 5 பாகை கோணத்தில் சாய்ந்திருக்கிறது. இதை ஒப்பிட்டால் கரிசெண்டா கோபுரத்தின் சாய்வு கோணம் குறைவுதான். ஆனால், கட்டிடத்தின் உறுதித்தன்மை மோசமடைந்துள்ளததனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோபுரத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோபுரத்தை சுற்றிலும் வலுவான வேலி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோபுரத்தின் இடிபாடுகளை வெளியில் விழாமல் தடுத்து, சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு வலைகளுடன் கூடிய உலோக வளைவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். உலோக வளைவு தரையில் உறுதியாக பொருத்தப்படும். உலோகத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராக்ஃபால் பாதுகாப்பு வலைகளும் தரையில் வலுவாக நங்கூரமிடப்படும்.
எனினும், கோபுரம் எப்போது இடிந்து விழும் என்பது சரியாக கணிக்கப்படாத நிலையில், மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இத்தாலியின் போலோக்னா நகரின் அடையாளங்களாக இரண்டு சாய்ந்த கோபுரங்கள் உள்ளன. அவை பழைய வளையச் சுவரின் (old ring wall) வாயில்களுக்குச் செல்லும் சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளன. உயரமான கோபுரம் அசினெல்லி என்றும், அதிக அளவில் சாய்ந்த சிறிய கோபுரம் கரிசெண்டா என்றும் அழைக்கப்படுகிறது. அசினெல்லி கோபுரம் 319 அடி உயரம் கொண்டது. கரிசெண்டா கோபுரத்தின் உயரம் 157 அடி ஆகும்.
1109-1119 காலகட்டத்தில் கோபுரங்களைக் கட்டியதாகக் கருதப்படும் குடும்பங்களின் பெயர்கள் இந்த கோபுரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...