News1000 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்துவிழும் அபாயத்தில்!

1000 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்துவிழும் அபாயத்தில்!

-

இத்தாலியின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக கரிசெண்டா சாய்ந்த கோபுரம் திகழ்கிறது.
900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோபுரம் கடந்த சில ஆண்டுகளாக, படிப்படியாக சாயத் தொடங்கியதையடுத்து அறிவியல் ஆய்வுக்குழுவினர் இந்த கோபுரத்தை ஆய்வு செய்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு முதல் தளத்தை கண்காணித்த அறிவியல் குழுவினர், சமீபத்தில் 27 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், கோபுரத்தின் தன்மை மோசமாக இருப்பதாகவும், இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான சென்சார் அளவீடுகள், இந்த எச்சரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
கோபுரம் தற்போது 4 பாகை கோணத்தில் சாய்ந்துள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலியின் மிகவும் பிரபலமான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 5 பாகை கோணத்தில் சாய்ந்திருக்கிறது. இதை ஒப்பிட்டால் கரிசெண்டா கோபுரத்தின் சாய்வு கோணம் குறைவுதான். ஆனால், கட்டிடத்தின் உறுதித்தன்மை மோசமடைந்துள்ளததனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோபுரத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோபுரத்தை சுற்றிலும் வலுவான வேலி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோபுரத்தின் இடிபாடுகளை வெளியில் விழாமல் தடுத்து, சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு வலைகளுடன் கூடிய உலோக வளைவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். உலோக வளைவு தரையில் உறுதியாக பொருத்தப்படும். உலோகத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராக்ஃபால் பாதுகாப்பு வலைகளும் தரையில் வலுவாக நங்கூரமிடப்படும்.
எனினும், கோபுரம் எப்போது இடிந்து விழும் என்பது சரியாக கணிக்கப்படாத நிலையில், மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இத்தாலியின் போலோக்னா நகரின் அடையாளங்களாக இரண்டு சாய்ந்த கோபுரங்கள் உள்ளன. அவை பழைய வளையச் சுவரின் (old ring wall) வாயில்களுக்குச் செல்லும் சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளன. உயரமான கோபுரம் அசினெல்லி என்றும், அதிக அளவில் சாய்ந்த சிறிய கோபுரம் கரிசெண்டா என்றும் அழைக்கப்படுகிறது. அசினெல்லி கோபுரம் 319 அடி உயரம் கொண்டது. கரிசெண்டா கோபுரத்தின் உயரம் 157 அடி ஆகும்.
1109-1119 காலகட்டத்தில் கோபுரங்களைக் கட்டியதாகக் கருதப்படும் குடும்பங்களின் பெயர்கள் இந்த கோபுரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம் அதன் நகராட்சி மன்றங்களில் பெண்களின் தலைமையை அதிகரிக்க தொடர்ச்சியான புதிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் நகராட்சி மன்றங்களில் 50% கவுன்சில் தலைமைப்...

சர்வதேச முதலீட்டை நோக்கித் திரும்பும் ஆஸ்திரேலிய வணிக ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியாவில் நன்கு அறியப்பட்ட சொத்து முதலீட்டாளரான Scott O’Neill, நியூசிலாந்தில் தனது புதிய முதலீடுகளைச் செய்யத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலிய சொத்துச் சந்தையில் விலை உயர்வு/வட்டி விகிதங்கள்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

ஆஸ்திரேலியாவிற்கு குறைந்த விலை பொருட்களை வழங்கும் ஒரு கனேடிய நிறுவனம்

கனேடிய தள்ளுபடி சில்லறை விற்பனையாளர் Dollarama, ஆஸ்திரேலிய சங்கிலித் தொடர் நிறுவனமான The Reject Shop-ஐ கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் $259 மில்லியன் மதிப்புடையது, மேலும்...