Breaking NewsNSW துணை மருத்துவர்களிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு எச்சரிக்கை!

NSW துணை மருத்துவர்களிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு எச்சரிக்கை!

-

ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பாராமெடிக்கல் சங்கம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழிற்சங்கங்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மறுபதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான தொழில்சார் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அரச அவசர சேவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தொகையும், பணமும் மாநில அரசிடம் இல்லை என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதன்படி 20 வீத சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவை சங்கங்கள் தெரிவித்திருப்பதுடன், எதிர்வரும் இரண்டு வருடங்களில் மேலதிகமாக 4 வீத சம்பள அதிகரிப்பு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், 8 மாதங்களுக்கும் மேலாக சம்பள முரண்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...

விமானத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

British Airways விமானத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி...

ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட Microsoft

Microsoft தனது சந்தா திட்டத்தில் (subscription plan) ஏற்பட்ட விலை நிர்ணய பிரச்சினைக்காக ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்...