Newsவேஷ்டி அணிந்தவருக்கு உள்செல்ல அனுமதி மறுத்த கோலியின் ஹோட்டல்!

வேஷ்டி அணிந்தவருக்கு உள்செல்ல அனுமதி மறுத்த கோலியின் ஹோட்டல்!

-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பை ஹோட்டலில் வேஷ்டி, சட்டையில் சென்ற மதுரை பிரபலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ராம், தமிழ் ராப் பாடல்கள் பாடி இன்ஸ்டகிராமில் ராவண ராம் என்ற பெயரில் பிரபலமானார். எப்போது வேஷ்டி சட்டை அணிந்து ராப் பாடல், அடுக்குமொழி பேசி தொடர்ந்து காணொளி வெளியிட்டு வரும் இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ராவண ராம் மும்பையில் சென்ற நிலையில் வேஷ்டி சட்டை அணிந்து விராட் கோலியின் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்ற போது வேஷ்டி சட்டையில் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதியில்லை என ஊழியர்கள் கூறி அவரை வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த ராவண ராம் அந்த ஹோட்டல் முன்பு நின்றபடி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பேசி காடிணாளியாக வெளியிட்டுள்ளார்.

காணொளி

இதுதான் விராட் கோலியின் ஒன்8 ஹோட்டல். இப்படி நடந்தது மனதுக்கு கஷ்டமாகி விட்டது. விராட் கோலியின் பெயருக்காக இங்கு வருகின்றனர். இதை சொல்லியே ஆக வேண்டும். நான் புதிய வேஷ்டி அணிந்து தான் ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் டிரஸ்கோட் சரியில்லை என ஊழியர்கள் என்னை அனுமதிக்கவில்லை. .நான் தமிழ் கலாசார உடையுடன் வந்துள்ளேன். அத்தோடு அதிக பசியோடு வந்தேன் .ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இது மனதுக்கு ரொம்ப கஷ்டமாகயுள்ளது. வருத்தத்தோடு அறைக்கு செல்கிறேன்” என காணொளி வெளியிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...