Newsவேஷ்டி அணிந்தவருக்கு உள்செல்ல அனுமதி மறுத்த கோலியின் ஹோட்டல்!

வேஷ்டி அணிந்தவருக்கு உள்செல்ல அனுமதி மறுத்த கோலியின் ஹோட்டல்!

-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பை ஹோட்டலில் வேஷ்டி, சட்டையில் சென்ற மதுரை பிரபலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ராம், தமிழ் ராப் பாடல்கள் பாடி இன்ஸ்டகிராமில் ராவண ராம் என்ற பெயரில் பிரபலமானார். எப்போது வேஷ்டி சட்டை அணிந்து ராப் பாடல், அடுக்குமொழி பேசி தொடர்ந்து காணொளி வெளியிட்டு வரும் இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ராவண ராம் மும்பையில் சென்ற நிலையில் வேஷ்டி சட்டை அணிந்து விராட் கோலியின் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்ற போது வேஷ்டி சட்டையில் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதியில்லை என ஊழியர்கள் கூறி அவரை வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த ராவண ராம் அந்த ஹோட்டல் முன்பு நின்றபடி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பேசி காடிணாளியாக வெளியிட்டுள்ளார்.

காணொளி

இதுதான் விராட் கோலியின் ஒன்8 ஹோட்டல். இப்படி நடந்தது மனதுக்கு கஷ்டமாகி விட்டது. விராட் கோலியின் பெயருக்காக இங்கு வருகின்றனர். இதை சொல்லியே ஆக வேண்டும். நான் புதிய வேஷ்டி அணிந்து தான் ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் டிரஸ்கோட் சரியில்லை என ஊழியர்கள் என்னை அனுமதிக்கவில்லை. .நான் தமிழ் கலாசார உடையுடன் வந்துள்ளேன். அத்தோடு அதிக பசியோடு வந்தேன் .ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இது மனதுக்கு ரொம்ப கஷ்டமாகயுள்ளது. வருத்தத்தோடு அறைக்கு செல்கிறேன்” என காணொளி வெளியிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...