Sportsஉயிரிழந்த தந்தை என்னுடைய திருமணத்திற்கு ஆவியாக வந்தார்!

உயிரிழந்த தந்தை என்னுடைய திருமணத்திற்கு ஆவியாக வந்தார்!

-

உயிரிழந்த தந்தை தனது திருமணத்திற்கு ஆவியாக வந்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் அவரது நீண்ட நாள் தோழி சாரா வேரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் 2020ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக இவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது, பின் 2021ம் ஆண்டு திருமணத்தை திட்டமிட்ட போது ஜெசிக்காவின் தந்தை உயிரிழந்ததால் மீண்டும் திருமணம் தடைபட்டது.

இறுதியில் ஜெசிக்கா ஜனாசன் சாரா வேரன் திருமணம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய தந்தை திருமணத்தில் ஆவியாக வந்து கலந்து கொண்டாதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய போது, தன்னுடைய தந்தைக்கு வண்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் தான் அவர் நினைவாக வண்டை தன் உடம்பில் டாட்டூவாக குத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய திருமணத்தின் போது வண்டு ஒன்று தன் கையில் வந்து அமர்ந்ததாகவும், இறுதியில் நாங்கள் ஹோட்டல் அறைக்கு செல்லும் வரை வண்டு தன்னுடன் இருந்ததாகவும் குறிப்பிட்ட ஜெசிக்கா, தனது தந்தை தான் ஆவியாக வண்டு உருவத்தில் என்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதலில் இதனை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன், அப்போது நமது திருமணத்தை மிஸ் செய்யாமல் தந்தை வந்துவிட்டார் என மனைவி சாரா கிண்டல் கூட செய்தார் என ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...