Sportsஉயிரிழந்த தந்தை என்னுடைய திருமணத்திற்கு ஆவியாக வந்தார்!

உயிரிழந்த தந்தை என்னுடைய திருமணத்திற்கு ஆவியாக வந்தார்!

-

உயிரிழந்த தந்தை தனது திருமணத்திற்கு ஆவியாக வந்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் அவரது நீண்ட நாள் தோழி சாரா வேரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் 2020ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக இவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது, பின் 2021ம் ஆண்டு திருமணத்தை திட்டமிட்ட போது ஜெசிக்காவின் தந்தை உயிரிழந்ததால் மீண்டும் திருமணம் தடைபட்டது.

இறுதியில் ஜெசிக்கா ஜனாசன் சாரா வேரன் திருமணம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய தந்தை திருமணத்தில் ஆவியாக வந்து கலந்து கொண்டாதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய போது, தன்னுடைய தந்தைக்கு வண்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் தான் அவர் நினைவாக வண்டை தன் உடம்பில் டாட்டூவாக குத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய திருமணத்தின் போது வண்டு ஒன்று தன் கையில் வந்து அமர்ந்ததாகவும், இறுதியில் நாங்கள் ஹோட்டல் அறைக்கு செல்லும் வரை வண்டு தன்னுடன் இருந்ததாகவும் குறிப்பிட்ட ஜெசிக்கா, தனது தந்தை தான் ஆவியாக வண்டு உருவத்தில் என்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதலில் இதனை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன், அப்போது நமது திருமணத்தை மிஸ் செய்யாமல் தந்தை வந்துவிட்டார் என மனைவி சாரா கிண்டல் கூட செய்தார் என ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

Latest news

2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பாலியல் குறித்த புதிய கேள்விகள்

ஆஸ்திரேலியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்த முறை, பாலினம் தொடர்பான...

விமான விபத்து காரணமாக மூடப்பட்ட விமான நிலையம்

விமான விபத்து காரணமாக லண்டன் Southend விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு இலகுரக விமானம் ஈடுபட்டதாகவும், புறப்பட்ட...

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடுமையான வேலை வெட்டுக்கள்

டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின்...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

ஆசிய வர்த்தகத்தின் மீது திரும்பிய ஆஸ்திரேலியாவின் கவனம்

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ஆசிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக ஆஸ்திரேலியா இருக்க விரும்புவதாகவும், பொருளாதார உறவுகளை...