Cinemaபடமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

படமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

-

தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவரான சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையை, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தார்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் ‘சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி, வரவேற்பைப் பெற்றதுடன் மலையாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது குறிப்பிடத்த்ககது.

இந்நிலையில், நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது. 2018இல் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது.

2023 ஜனவரியில் வெளியான மிகப்பெரிய படமான ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் மேலும் பிரபலமான சந்திரிகா ரவி அடுத்த ஆண்டில் மேலும் 3 தென்னிந்திய படங்களை நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தினை எஸ்டிஆர்ஐ சினிமா தயாரிக்க ஜெயராம் இயக்கியுள்ளார். 2024இல் தமிழ், தெலங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது. 

இயக்குநர் ஜெயராம் தனுஷின் பிரெஞ்சுப் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகிர் (பக்கிரி) படத்துக்கு தமிழ் வசனங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...