Cinemaபடமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

படமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

-

தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவரான சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையை, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தார்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் ‘சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி, வரவேற்பைப் பெற்றதுடன் மலையாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது குறிப்பிடத்த்ககது.

இந்நிலையில், நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது. 2018இல் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது.

2023 ஜனவரியில் வெளியான மிகப்பெரிய படமான ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் மேலும் பிரபலமான சந்திரிகா ரவி அடுத்த ஆண்டில் மேலும் 3 தென்னிந்திய படங்களை நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தினை எஸ்டிஆர்ஐ சினிமா தயாரிக்க ஜெயராம் இயக்கியுள்ளார். 2024இல் தமிழ், தெலங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது. 

இயக்குநர் ஜெயராம் தனுஷின் பிரெஞ்சுப் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகிர் (பக்கிரி) படத்துக்கு தமிழ் வசனங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...