Cinemaபடமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

படமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

-

தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவரான சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையை, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தார்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் ‘சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி, வரவேற்பைப் பெற்றதுடன் மலையாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது குறிப்பிடத்த்ககது.

இந்நிலையில், நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது. 2018இல் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா த அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது.

2023 ஜனவரியில் வெளியான மிகப்பெரிய படமான ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் மேலும் பிரபலமான சந்திரிகா ரவி அடுத்த ஆண்டில் மேலும் 3 தென்னிந்திய படங்களை நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தினை எஸ்டிஆர்ஐ சினிமா தயாரிக்க ஜெயராம் இயக்கியுள்ளார். 2024இல் தமிழ், தெலங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது. 

இயக்குநர் ஜெயராம் தனுஷின் பிரெஞ்சுப் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகிர் (பக்கிரி) படத்துக்கு தமிழ் வசனங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்

இந்த ஆண்டு விக்டோரியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. விக்டோரியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து பறவைக் காய்ச்சலின் மூன்றாவது வழக்கு பதிவானதைத்...

ஆஸ்திரேலியாவில் போக்கர் இயந்திரத்தால் 8 பில்லியன் டாலர்கள் இழப்பு

சூதாட்டத்தால் மக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மதுபானம் மற்றும் கேமிங் தரவுகள், அந்த மாநிலத்தில்...

விக்டோரியாவில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்குவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் காவல்துறைத் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து தனது பதவியை...

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி

இந்தியாவில் ஒரு அரசியல்வாதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முகமூடி அணிந்த ஒரு குழு, காங்கிரஸ் எம்.பி. ரீ ரகிபுல் உசேன்...

மெல்பேர்ண் பள்ளிக்கு எழுந்துள்ள AI நெருக்கடி

மெல்பேர்ண் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆபாசப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. கிளாட்ஸ்டோன் பார்க் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப்...

ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்திற்கு மில்லியன் டாலர்கள் அபராதம்

ஆஸ்திரேலிய சூப்பர் பைனான்சியல் நிறுவனத்திற்கு $27 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Australian Super Fund ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். மேலும் இது உலகின் 16வது...