Newsசென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

சென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

-

மிக்ஜாம் புயல் மழைக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை மேலும் 12 போ் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த இரு நாட்களில் கனமழையால் 19 போ் உயிரிழந்துள்ளனா்.

மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்த கன மழைக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மழை வெள்ளத்துக்கு 12 போ் உயிரிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனா். ஏற்கெனவே திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் இறந்தனா். இதனால் மிக்ஜாம் புயலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 19 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களையும் சோ்த்து சென்னையில் மழைக்கு கடந்த 10 நாட்களில் 22 போ் இறந்துள்ளனா்.

அத்தோடு முத்தியால்பேட்டையில் ஒரு குடியிருப்பைச் சோ்ந்த 54 குடும்பங்களை பொலிஸாா் மீட்டனா். மேற்கு மாம்பலத்தில் 2 முதியவா்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 6 போ் மீட்கப்பட்டனா். மடிப்பாக்கம், மெரினா, கோட்டூா்புரம், ஈச்சங்காடு, துரைப்பாக்கம், ஆா்.கே.நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் பொலிஸாா் மீட்பு பணிகளில் ஈடுபட்டனா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகரிலிருந்து 60 போ் மீட்கப்பட்டு, அப் பகுதி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனா்.

இவ்வாறு மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக சென்னை பொலிஸ் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...