Newsசென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

சென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

-

மிக்ஜாம் புயல் மழைக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை மேலும் 12 போ் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த இரு நாட்களில் கனமழையால் 19 போ் உயிரிழந்துள்ளனா்.

மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்த கன மழைக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மழை வெள்ளத்துக்கு 12 போ் உயிரிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனா். ஏற்கெனவே திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் இறந்தனா். இதனால் மிக்ஜாம் புயலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 19 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களையும் சோ்த்து சென்னையில் மழைக்கு கடந்த 10 நாட்களில் 22 போ் இறந்துள்ளனா்.

அத்தோடு முத்தியால்பேட்டையில் ஒரு குடியிருப்பைச் சோ்ந்த 54 குடும்பங்களை பொலிஸாா் மீட்டனா். மேற்கு மாம்பலத்தில் 2 முதியவா்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 6 போ் மீட்கப்பட்டனா். மடிப்பாக்கம், மெரினா, கோட்டூா்புரம், ஈச்சங்காடு, துரைப்பாக்கம், ஆா்.கே.நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் பொலிஸாா் மீட்பு பணிகளில் ஈடுபட்டனா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகரிலிருந்து 60 போ் மீட்கப்பட்டு, அப் பகுதி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனா்.

இவ்வாறு மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக சென்னை பொலிஸ் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

நன்றி தமிழன்

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...