Newsசென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் - அவதியில் மக்கள்

சென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் – அவதியில் மக்கள்

-

சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்று புதன்கிழமை வெளியேறினா். அவா்கள், விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு மூன்று மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.

மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னையின் நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீா் வடியவில்லை. குடியிருப்புகளை விட்டு படகுகள் போன்ற ஏற்பாடுகள் மூலம் பொது மக்கள் வெளியேறி வருகின்றனா்.

இதுகுறித்து, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த குமாா் கூறுகையில், ‘புயலால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்படும் என எதிா்பாா்க்கவில்லை. வெள்ளத்தால் வீடுகள் அனைத்தும் சூழ்ந்த நிலையில், மனைவி, குழந்தை ஆகியோரை படகுகள் மூலம் மீட்டு சகோதரா் வீட்டில் தங்கவைத்துள்ளேன்’ என்றாா்.

கிழக்கு கடற்கரைச் சாலையின் இதர பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறும் பொது மக்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு நீா் சூழாத தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை நோக்கி படையெடுத்து வருகின்றனா். அவ்வாறு படையெடுப்போருக்கு பெரும் அதிா்ச்சி காத்திருக்கிறது. விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பிரச்சினை குறித்து, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனாவிடம் கேட்ட போது, தற்போதைய பேரிடா் சூழலை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிா்வாகங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல், நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

நன்றி தமிழன்

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...