Newsசென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் - அவதியில் மக்கள்

சென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் – அவதியில் மக்கள்

-

சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்று புதன்கிழமை வெளியேறினா். அவா்கள், விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு மூன்று மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.

மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னையின் நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீா் வடியவில்லை. குடியிருப்புகளை விட்டு படகுகள் போன்ற ஏற்பாடுகள் மூலம் பொது மக்கள் வெளியேறி வருகின்றனா்.

இதுகுறித்து, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த குமாா் கூறுகையில், ‘புயலால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்படும் என எதிா்பாா்க்கவில்லை. வெள்ளத்தால் வீடுகள் அனைத்தும் சூழ்ந்த நிலையில், மனைவி, குழந்தை ஆகியோரை படகுகள் மூலம் மீட்டு சகோதரா் வீட்டில் தங்கவைத்துள்ளேன்’ என்றாா்.

கிழக்கு கடற்கரைச் சாலையின் இதர பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறும் பொது மக்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு நீா் சூழாத தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை நோக்கி படையெடுத்து வருகின்றனா். அவ்வாறு படையெடுப்போருக்கு பெரும் அதிா்ச்சி காத்திருக்கிறது. விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பிரச்சினை குறித்து, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனாவிடம் கேட்ட போது, தற்போதைய பேரிடா் சூழலை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிா்வாகங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல், நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

நன்றி தமிழன்

Latest news

 மரண ஆபத்தை ஏற்படுத்தும் CellAED இயந்திரம் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 'CellAED' வகை Defibrillatorsகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தின் சரிவு...

அடுத்த வாரம் 2 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ள Samsung

Samsung தனது சமீபத்திய Galaxy A17 5G Smartphone மற்றும் Galaxy Tab A11+ டேப்லெட்டை வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அறிமுகப்படுத்தப்போவதாக...

போதைப்பொருட்களால் உயிரை மாய்த்துக் கொண்டு உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் ஆஸ்திரேலியர்

தன்னார்வ மரணத்தைத் தூண்டுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, தனது உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் நபராக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் உருவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கரேன் டங்கன்...

ஆபாச படங்களை உருவாக்குவதாக Grok AI நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் Grok என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் இது...

சிட்னியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ஆஷஸ் போட்டியின் முதல் நாளுக்கு முன்னதாக, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை ரோந்து செல்ல, அதிக ஆயுதம் ஏந்திய நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரின் ஒரு...

அரசாங்க வலைத்தளத்தை ஹேக் செய்த பிரிட்டிஷ் ஹேக்கருக்கு ஆஸ்திரேலியா வழங்கிய சிறப்பு விசா

ஒரு தனிநபர் பெறுவதற்கு மிகவும் கடினமான ஆஸ்திரேலிய விசா வகைகளில் ஒன்றை பிரிட்டிஷ் ஹேக்கர் ஒருவர் பெற முடிந்தது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இணைய அமைப்பில் ஒரு முக்கியமான...