Newsசென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் - அவதியில் மக்கள்

சென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் – அவதியில் மக்கள்

-

சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்று புதன்கிழமை வெளியேறினா். அவா்கள், விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு மூன்று மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.

மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னையின் நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீா் வடியவில்லை. குடியிருப்புகளை விட்டு படகுகள் போன்ற ஏற்பாடுகள் மூலம் பொது மக்கள் வெளியேறி வருகின்றனா்.

இதுகுறித்து, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த குமாா் கூறுகையில், ‘புயலால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்படும் என எதிா்பாா்க்கவில்லை. வெள்ளத்தால் வீடுகள் அனைத்தும் சூழ்ந்த நிலையில், மனைவி, குழந்தை ஆகியோரை படகுகள் மூலம் மீட்டு சகோதரா் வீட்டில் தங்கவைத்துள்ளேன்’ என்றாா்.

கிழக்கு கடற்கரைச் சாலையின் இதர பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறும் பொது மக்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு நீா் சூழாத தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை நோக்கி படையெடுத்து வருகின்றனா். அவ்வாறு படையெடுப்போருக்கு பெரும் அதிா்ச்சி காத்திருக்கிறது. விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பிரச்சினை குறித்து, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனாவிடம் கேட்ட போது, தற்போதைய பேரிடா் சூழலை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிா்வாகங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல், நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

நன்றி தமிழன்

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...