Newsசென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் - அவதியில் மக்கள்

சென்னையில் மழை நின்றும் வடியாத வெள்ளம் – அவதியில் மக்கள்

-

சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்று புதன்கிழமை வெளியேறினா். அவா்கள், விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு மூன்று மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.

மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னையின் நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீா் வடியவில்லை. குடியிருப்புகளை விட்டு படகுகள் போன்ற ஏற்பாடுகள் மூலம் பொது மக்கள் வெளியேறி வருகின்றனா்.

இதுகுறித்து, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த குமாா் கூறுகையில், ‘புயலால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்படும் என எதிா்பாா்க்கவில்லை. வெள்ளத்தால் வீடுகள் அனைத்தும் சூழ்ந்த நிலையில், மனைவி, குழந்தை ஆகியோரை படகுகள் மூலம் மீட்டு சகோதரா் வீட்டில் தங்கவைத்துள்ளேன்’ என்றாா்.

கிழக்கு கடற்கரைச் சாலையின் இதர பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறும் பொது மக்கள், பாதுகாப்பாக தங்குவதற்கு நீா் சூழாத தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை நோக்கி படையெடுத்து வருகின்றனா். அவ்வாறு படையெடுப்போருக்கு பெரும் அதிா்ச்சி காத்திருக்கிறது. விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பிரச்சினை குறித்து, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனாவிடம் கேட்ட போது, தற்போதைய பேரிடா் சூழலை கருத்தில் கொண்டு ஹோட்டல்கள் நிா்வாகங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல், நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டும் பெற்றுக் கொண்டு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

நன்றி தமிழன்

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் திடீரென காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது

இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...