Newsகடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

கடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

-

அவுஸ்திரேலியாவில் கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட நிலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தின் பிரிபி தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஜோஷ் டெய்லர் என்பவரே மணலில் புதையுண்டு மரணமடைந்தவர்.

அதிகாரிகள் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், பன்றி மாமிசம் சமைக்க தோண்டப்பட்ட குழி அது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவிக்குழுவினர் ஹெலிகொப்டர் வசதியை பயன்படுத்தி, இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால், காயங்கள் காரணமாக இளைஞர் ஜோஷ் டெய்லர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவயிடத்தில் பல எண்ணிக்கையிலான மக்கள் காணப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேனுக்கு வடக்கே 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரபலமான பிரிபி தீவு. சம்பவத்தின் போது டெய்லரின் நண்பர்களும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 15 பேர்கள் கடுமையாக போராடி அந்த குழியில் இருந்து டெய்லரை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் வனப்பகுதி அதிகாரிகளில் சிலர் முதலுதவி அளித்துள்ளனர். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டெய்லரின் உயிர் காக்கும் கருவிகளை வியாழக்கிழமை நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குழிக்குள் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் மீண்டு வருவது கடினமான ஒன்றாக இருக்கும் என்றே மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாகவும், இதுவரை 42,000 அமெரிக்க டொலர் வரையில் உதவி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...