Newsகடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

கடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

-

அவுஸ்திரேலியாவில் கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட நிலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தின் பிரிபி தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஜோஷ் டெய்லர் என்பவரே மணலில் புதையுண்டு மரணமடைந்தவர்.

அதிகாரிகள் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், பன்றி மாமிசம் சமைக்க தோண்டப்பட்ட குழி அது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவிக்குழுவினர் ஹெலிகொப்டர் வசதியை பயன்படுத்தி, இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால், காயங்கள் காரணமாக இளைஞர் ஜோஷ் டெய்லர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவயிடத்தில் பல எண்ணிக்கையிலான மக்கள் காணப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேனுக்கு வடக்கே 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரபலமான பிரிபி தீவு. சம்பவத்தின் போது டெய்லரின் நண்பர்களும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 15 பேர்கள் கடுமையாக போராடி அந்த குழியில் இருந்து டெய்லரை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் வனப்பகுதி அதிகாரிகளில் சிலர் முதலுதவி அளித்துள்ளனர். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டெய்லரின் உயிர் காக்கும் கருவிகளை வியாழக்கிழமை நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குழிக்குள் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் மீண்டு வருவது கடினமான ஒன்றாக இருக்கும் என்றே மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாகவும், இதுவரை 42,000 அமெரிக்க டொலர் வரையில் உதவி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...