Newsவிசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

விசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

-

அவுஸ்திரேலியாவில், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் உடைய பணியாளர்களுக்கான, ‘விசா’ வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்க, அந்நாடு முடிவு செய்துள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகளில் பல சிக்கல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

கடந்த, 2022 – 23ம் ஆண்டு, ஐந்து லட்சத்து 10 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் குடியேறியதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இதை தொடர்ந்து, வெளிநாட்டினரின் குடியேற்றத்தை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் கூறியதாவது:

அவுஸ்திரேலியாவில், வெளிநாட்டினர் குடியேறுவதை கணிசமாக குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது சிறப்பான பலன்களை அளித்து வருகிறது. கடந்த 2022 – 23ல் குடியேற்ற எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததற்கு வெளிநாட்டு மாணவர்களின் வருகையே காரணமாக அமைந்துள்ளது.

எனவே, மாணவர்களுக்கான தேர்வில் ஆங்கில பாடத்தின் தகுதி மதிப்பெண்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திறன் குறைந்த பணியாளர்களின் விசா விதிமுறைகளையும் கடுமையாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...