Newsவிசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

விசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

-

அவுஸ்திரேலியாவில், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் உடைய பணியாளர்களுக்கான, ‘விசா’ வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்க, அந்நாடு முடிவு செய்துள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகளில் பல சிக்கல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

கடந்த, 2022 – 23ம் ஆண்டு, ஐந்து லட்சத்து 10 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் குடியேறியதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இதை தொடர்ந்து, வெளிநாட்டினரின் குடியேற்றத்தை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் கூறியதாவது:

அவுஸ்திரேலியாவில், வெளிநாட்டினர் குடியேறுவதை கணிசமாக குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது சிறப்பான பலன்களை அளித்து வருகிறது. கடந்த 2022 – 23ல் குடியேற்ற எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததற்கு வெளிநாட்டு மாணவர்களின் வருகையே காரணமாக அமைந்துள்ளது.

எனவே, மாணவர்களுக்கான தேர்வில் ஆங்கில பாடத்தின் தகுதி மதிப்பெண்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திறன் குறைந்த பணியாளர்களின் விசா விதிமுறைகளையும் கடுமையாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...