Newsகாசா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிரதமர்

காசா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிரதமர்

-

காசா பகுதியில் நிலையான போர்நிறுத்தத்திற்கான அவசர சர்வதேச முயற்சியை எட்டுவதற்கு கனடா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் போரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காஸா பகுதியில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டுமென மூன்று நாடுகளின் அரச தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

போர் மோதல்கள் காரணமாக ஆபத்தில் இருக்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு நிலையான மனிதாபிமான நன்மைகள் குறித்து இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

எவ்வாறாயினும், நிலையான யுத்த நிறுத்தத்திற்கு மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து அவசரகால நிலைமைக்கு ஆதரவு வழங்கியுள்ளதோடு, இதற்கு சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்களுக்கு முகங்கொடுத்து, இன்னும் பிணைக் கைதிகளாக உள்ள பொதுமக்களின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அணுகலை மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான உலகளாவிய கோரிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்த வேண்டும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...