Cinemaநடிகரும் இயக்குநருமான சங்கரன் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான சங்கரன் காலமானார்!

-

நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (92) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார்.

1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தேன் சிந்துதே வானம் , துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட 8 படங்களை இயக்கியுள்ளார்.

பொண்டாட்டி தேவை, தாயம்மா, மௌன ராகம், சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாயகனான கார்த்தி, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரைக் கூப்பிடும் காட்சி மிகப் பிரபலம்.

சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...