Newsதமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

தமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

-

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் தவறுதலாக பணயக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காசா முனையில் இஸ்ரேலிய படைகள் பணயக்கைதிளை பார்த்து இருக்கிறார்கள்.

அவர்கள் அச்சுறுத்தல்காரர்கள் என தவறுதலாக நினைத்து மூன்று பணயக்கைதிகளை கொலை செய்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பணயக்கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாங்க முடியாத சோகம் என்றார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய வழி

விக்டோரியா மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆன்லைனில் $85,000 வரை...

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 65,000...

விக்டோரியாவில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் பனி பொழியும்

இன்று விக்டோரியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் பனி முன்னறிவிப்பு விக்டோரியாவில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...

இன்று ஆஸ்திரேலியா வந்துள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இன்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு அவர்களின் முதல் பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், மேலும் அரச...

புதிய விண்வெளி பயணத்திற்கு தயாராகும் தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூனிபா சோதனை மைதானத்தில் இருந்து முதல் விண்வெளி ராக்கெட்டை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் சதர்ன் லாஞ்ச் கையெழுத்திட்டுள்ளது. உத்தேச புதிய திட்டம் குறித்து மத்திய...

சிட்னி துறைமுக பாலத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு

சிட்னி துறைமுக பாலத்தில் சிறிது நேரத்திற்கு முன் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பிற்பகல் 1.40 மணியளவில் மூன்று கார்களும் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில் இந்த...