Newsதமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

தமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

-

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் தவறுதலாக பணயக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காசா முனையில் இஸ்ரேலிய படைகள் பணயக்கைதிளை பார்த்து இருக்கிறார்கள்.

அவர்கள் அச்சுறுத்தல்காரர்கள் என தவறுதலாக நினைத்து மூன்று பணயக்கைதிகளை கொலை செய்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பணயக்கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாங்க முடியாத சோகம் என்றார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிக சம்பளம் வாங்கும் பிரதமரையும், மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களையும் கொண்ட மாநிலம்

விக்டோரியன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பள உயர்வைக் கோருகின்றனர். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் விக்டோரியாவில் இருந்தாலும், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தாங்கள்தான்...

செம்பு கம்பி திருட்டு மோசடி – $100 மில்லியன் இழப்பு

ஆஸ்திரேலியாவின் மின் அமைப்புகளை கடுமையாகப் பாதிக்கும் செம்பு திருட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெருவிளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் செம்பு கம்பிகள் ஏராளமான திருட்டுப் போனதாகப் புகார்கள் வந்துள்ளன. இதை...

செம்பு கம்பி திருட்டு மோசடி – $100 மில்லியன் இழப்பு

ஆஸ்திரேலியாவின் மின் அமைப்புகளை கடுமையாகப் பாதிக்கும் செம்பு திருட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெருவிளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் செம்பு கம்பிகள் ஏராளமான திருட்டுப் போனதாகப் புகார்கள் வந்துள்ளன. இதை...

Virgin விமானத்தில் இருந்த பாம்பு – தாமதமான பயணம்

மெல்பேர்ணில் விர்ஜின் விமானத்தில் ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மெல்பேர்ணில் இருந்து புறப்படவிருந்த விமானம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தில் ஒரு பச்சை...