News10 ஆண்டுகளாக தாயை தேடும் இந்திய வம்சாவளி சுவிட்சர்லாந்து பெண்

10 ஆண்டுகளாக தாயை தேடும் இந்திய வம்சாவளி சுவிட்சர்லாந்து பெண்

-

இந்தியாவில் பிறந்து சுவிட்சர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தனது தாயை 10 ஆண்டுகளாக தேடி வருகிறார்.

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில் விட்டுச் சென்றார்.

பின்னர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் வித்யா ஃபிலிப்பனை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, 27 வயதான வித்யா ஃபிலிப்பனுக்கு திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பைக்கு வந்து வித்யா தேடி வருகிறார்.

தனது தாய் வசித்ததாக கூறப்படும் தஹிசார் பகுதிக்குச் சென்று வித்யா ஃபிலிப்பன் விசாரித்துள்ளார். ஆனால், அங்கு அவரது குடும்ப பெயரான ‘காம்ப்ளி’ என்ற அடைமொழியுடன் யாரும் இல்லை. தற்போது, குடும்ப பெயரும், அடைமொழியும் மட்டுமே உள்ள நிலையில் தனது கணவருடன் வித்யா ஃபிலிப்பன் மனம் தளராது தேடி வருகிறார்.

இது தொடர்பாக வித்யா ஃபிலிப்பன் கூறுகையில், “எனது தாயைக் கண்டறிவதற்கு தத்து உரிமை கவுன்சில் இயக்குநரும், வழக்கறிஞருமான அஞ்சலி பவார் உதவி வருகிறார். எனது தாய் என்னை 20 வயதில் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது, 10 ஆண்டுகளாக நான் அவரை தேடி வருகிறேன். எனது அம்மாவை கண்டுபிடிப்பதற்கு மும்பை மக்கள் வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...

தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க NSW ஓட்டுநர்கள் கூறும் சாக்குகள்

நியூ சவுத் வேல்ஸில் ஓட்டுநர்கள் தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க அற்புதமான சாக்குப்போக்குகளைச் சொல்வது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நான்கு மொபைல் போன் பயன்பாட்டு வழக்குகளில் மூன்று தள்ளுபடி...