News10 ஆண்டுகளாக தாயை தேடும் இந்திய வம்சாவளி சுவிட்சர்லாந்து பெண்

10 ஆண்டுகளாக தாயை தேடும் இந்திய வம்சாவளி சுவிட்சர்லாந்து பெண்

-

இந்தியாவில் பிறந்து சுவிட்சர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தனது தாயை 10 ஆண்டுகளாக தேடி வருகிறார்.

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில் விட்டுச் சென்றார்.

பின்னர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் வித்யா ஃபிலிப்பனை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, 27 வயதான வித்யா ஃபிலிப்பனுக்கு திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பைக்கு வந்து வித்யா தேடி வருகிறார்.

தனது தாய் வசித்ததாக கூறப்படும் தஹிசார் பகுதிக்குச் சென்று வித்யா ஃபிலிப்பன் விசாரித்துள்ளார். ஆனால், அங்கு அவரது குடும்ப பெயரான ‘காம்ப்ளி’ என்ற அடைமொழியுடன் யாரும் இல்லை. தற்போது, குடும்ப பெயரும், அடைமொழியும் மட்டுமே உள்ள நிலையில் தனது கணவருடன் வித்யா ஃபிலிப்பன் மனம் தளராது தேடி வருகிறார்.

இது தொடர்பாக வித்யா ஃபிலிப்பன் கூறுகையில், “எனது தாயைக் கண்டறிவதற்கு தத்து உரிமை கவுன்சில் இயக்குநரும், வழக்கறிஞருமான அஞ்சலி பவார் உதவி வருகிறார். எனது தாய் என்னை 20 வயதில் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது, 10 ஆண்டுகளாக நான் அவரை தேடி வருகிறேன். எனது அம்மாவை கண்டுபிடிப்பதற்கு மும்பை மக்கள் வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...