Newsலண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

-

லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக லண்டன் வந்திருந்த குரஷ்மான் சிங் (Gurashman Singh Bhatia, 23), கடந்த வியாழக்கிழமை, அதாவது, டிசம்பர் 14ஆம் திகதி, நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

மறுநாள், அதாவது, டிசம்பர் 15ஆம் திகதி அதிகாலை 4.20 மணிக்கு லண்டனிலுள்ள South Quay என்னுமிடத்திலுள்ள CCTV ஒன்றில் சிங் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

சிங் அறைக்குத் திரும்பாததால், காலை 5.48 மணிக்கு, அது குறித்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

இதற்கிடையில், டிசம்பர் 20ஆம் திகதி, மதியம், South Quayயிலுள்ள நதி ஒன்றிலிருந்து சிங்கின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட, இந்திய ஊடகங்கள் வித்தியாசமான செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், நேற்று, அதாவது, 21.12.2023 அன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிங்கின் குடும்பத்தினர், சிங் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை மறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலிருக்கும் சிங்கின் சகோதரர் ஒருவரும் நாங்கள் இன்னமும் சிங்கை தேடிக்கொண்டிருக்கிறோம், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்று கூற, குழப்பமான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் வாழும் சிங்கின் உறவினரான Irendeep Brown என்னும் பெண்மணி, சிங் மரணம் தொடர்பாக சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

நதியோரமாக நடந்து சென்ற சிங், தண்ணீரில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ள Irendeep, அது ஒரு விபத்து என்றும், சிங்குக்கு நீச்சல் தெரியாது, உறையவைக்கும் குளிர்ந்த நீரில் விழுந்த அவர் உயிரிழந்திருக்கலாம், அது விபத்தேயொழிய, தற்கொலையோ, இனவெறித்தாக்குதலோ அல்ல என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்,சிங்குடைய ATM அட்டையை யாரோ பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...