Newsலண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

-

லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக லண்டன் வந்திருந்த குரஷ்மான் சிங் (Gurashman Singh Bhatia, 23), கடந்த வியாழக்கிழமை, அதாவது, டிசம்பர் 14ஆம் திகதி, நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

மறுநாள், அதாவது, டிசம்பர் 15ஆம் திகதி அதிகாலை 4.20 மணிக்கு லண்டனிலுள்ள South Quay என்னுமிடத்திலுள்ள CCTV ஒன்றில் சிங் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

சிங் அறைக்குத் திரும்பாததால், காலை 5.48 மணிக்கு, அது குறித்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

இதற்கிடையில், டிசம்பர் 20ஆம் திகதி, மதியம், South Quayயிலுள்ள நதி ஒன்றிலிருந்து சிங்கின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட, இந்திய ஊடகங்கள் வித்தியாசமான செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், நேற்று, அதாவது, 21.12.2023 அன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிங்கின் குடும்பத்தினர், சிங் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை மறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலிருக்கும் சிங்கின் சகோதரர் ஒருவரும் நாங்கள் இன்னமும் சிங்கை தேடிக்கொண்டிருக்கிறோம், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்று கூற, குழப்பமான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் வாழும் சிங்கின் உறவினரான Irendeep Brown என்னும் பெண்மணி, சிங் மரணம் தொடர்பாக சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

நதியோரமாக நடந்து சென்ற சிங், தண்ணீரில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ள Irendeep, அது ஒரு விபத்து என்றும், சிங்குக்கு நீச்சல் தெரியாது, உறையவைக்கும் குளிர்ந்த நீரில் விழுந்த அவர் உயிரிழந்திருக்கலாம், அது விபத்தேயொழிய, தற்கொலையோ, இனவெறித்தாக்குதலோ அல்ல என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்,சிங்குடைய ATM அட்டையை யாரோ பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...