Sports870வது கோல் அடித்து சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

870வது கோல் அடித்து சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

-

அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது. 

சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் எட்டிஃபாக் (Al-Ettifaq) அணிகள் மோதிய போட்டி Al-Awwal Park மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் அல் நஸரின் அலெக்ஸ் டெலஸ் (Alex Tells) காற்றில் பறந்து வந்த பந்தை, அப்படியே திருப்பி அடித்து கோலாக மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து 59வது நிமிடத்தில் ரொனால்டோ தலையால் முட்டி பாஸ் செய்த பந்தை, மார்செலோ ப்ரோஸோவிக் (Marcelo Brozovic) கோலாக்கினார்.

அதன் பின்னர் 73வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ கோல் அடித்தார்.

இது ஒட்டுமொத்தமாக அவரது 870வது கோல் ஆகும். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்துள்ள அவரது கோல் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் (51) அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கிடையில் 85வது நிமிடத்தில் அல் எட்டிஃபாக் அணிக்கு முகமது அல் குவாய்கிபி மூலம் கோல் கிடைத்தது. இறுதியில் அல் நஸர் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளில் சேர்த்து அதிக கோல்கள் அடித்தவர்களில் ரொனால்டோ (870) முதலிடத்திலும், மெஸ்ஸி (821) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...