Sports870வது கோல் அடித்து சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

870வது கோல் அடித்து சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

-

அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது. 

சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் எட்டிஃபாக் (Al-Ettifaq) அணிகள் மோதிய போட்டி Al-Awwal Park மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் அல் நஸரின் அலெக்ஸ் டெலஸ் (Alex Tells) காற்றில் பறந்து வந்த பந்தை, அப்படியே திருப்பி அடித்து கோலாக மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து 59வது நிமிடத்தில் ரொனால்டோ தலையால் முட்டி பாஸ் செய்த பந்தை, மார்செலோ ப்ரோஸோவிக் (Marcelo Brozovic) கோலாக்கினார்.

அதன் பின்னர் 73வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ கோல் அடித்தார்.

இது ஒட்டுமொத்தமாக அவரது 870வது கோல் ஆகும். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்துள்ள அவரது கோல் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் (51) அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கிடையில் 85வது நிமிடத்தில் அல் எட்டிஃபாக் அணிக்கு முகமது அல் குவாய்கிபி மூலம் கோல் கிடைத்தது. இறுதியில் அல் நஸர் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளில் சேர்த்து அதிக கோல்கள் அடித்தவர்களில் ரொனால்டோ (870) முதலிடத்திலும், மெஸ்ஸி (821) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...