Sports870வது கோல் அடித்து சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

870வது கோல் அடித்து சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

-

அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது. 

சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் எட்டிஃபாக் (Al-Ettifaq) அணிகள் மோதிய போட்டி Al-Awwal Park மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் அல் நஸரின் அலெக்ஸ் டெலஸ் (Alex Tells) காற்றில் பறந்து வந்த பந்தை, அப்படியே திருப்பி அடித்து கோலாக மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து 59வது நிமிடத்தில் ரொனால்டோ தலையால் முட்டி பாஸ் செய்த பந்தை, மார்செலோ ப்ரோஸோவிக் (Marcelo Brozovic) கோலாக்கினார்.

அதன் பின்னர் 73வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ கோல் அடித்தார்.

இது ஒட்டுமொத்தமாக அவரது 870வது கோல் ஆகும். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்துள்ள அவரது கோல் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் (51) அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கிடையில் 85வது நிமிடத்தில் அல் எட்டிஃபாக் அணிக்கு முகமது அல் குவாய்கிபி மூலம் கோல் கிடைத்தது. இறுதியில் அல் நஸர் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளில் சேர்த்து அதிக கோல்கள் அடித்தவர்களில் ரொனால்டோ (870) முதலிடத்திலும், மெஸ்ஸி (821) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...