Newsஅதிரடியாக தரையிறக்கப்பட்ட 300 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

அதிரடியாக தரையிறக்கப்பட்ட 300 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

-

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 303 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பிரான்சில் உள்ள விமான நிலையம் ஒன்றில் அதிரடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்தே சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்புடைய விமானமானது வடகிழக்கு பிரான்சில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அந்த விமானத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலர் பயணப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

ஏர்பஸ் ஏ340 ரக விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிகரகுவா தலைநகர் மனகுவாவுக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே தொழில்நுட்ப காரணங்களை குறிப்பிட்டு பிரான்சின் மார்னே பகுதிக்கு சொந்தமான குட்டி விமான நிலையம் ஒன்றில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிசார் அந்த விமான நிலையத்தை மூடிவிட்டு, பயணிகளை விசாரிக்கும் பொருட்டு தடுத்து வைத்துள்ளனர். 303 இந்திய பயணிகளில் சிலர் சட்டவிரோத குடியேறிகள் என அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரு பயணிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, முதலில் பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருக்கவே அதிகாரிகள் அனுமதித்தனர், ஆனால் பின்னர் விமான நிலையத்தின் வருகை ஓய்வறை படுக்கைகளுடன் காத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த விமானமானது ரோமானிய தனியார் நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில்,

இந்த விவகாரம் தொடர்பில் பிரெஞ்சு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் விமானம் புறப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புகொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை ஆராய்ந்து வருகிறோம் என்றும், பயணிகளின் நலனை உறுதிப்படுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...