Newsஇந்தியாவில் சடுதியாக அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

இந்தியாவில் சடுதியாக அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

-

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் புதிய வகையான ‘ஜெ.என்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சோ்ந்த பெண்ணுக்கு இத்தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இதுவரை 23 பேருக்கு ‘ஜெ.என். 1’ வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உரிய பொது சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோா் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என கணிப்பு

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று தெரியவந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆபத்து மற்றும் மறுமொழி நிறுவனத்தின்...

ரஷ்யாவுக்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன – டிரம்பின் சமீபத்திய மிரட்டல்

போர் நிறுத்தத்திற்காக ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட 50 நாள் காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் குறைத்துள்ளார். உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு புதின் உடன்படவில்லை என்றால், கடுமையான...

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

கோவாவில் ஒன்று கூடிய சினிமா நட்சத்திரங்கள்

90களின் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் முதல்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆசிய கோப்பை

2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியை செப்டம்பர் 9 ஆம்...