Newsஇந்தியாவில் சடுதியாக அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

இந்தியாவில் சடுதியாக அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

-

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் புதிய வகையான ‘ஜெ.என்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சோ்ந்த பெண்ணுக்கு இத்தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இதுவரை 23 பேருக்கு ‘ஜெ.என். 1’ வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உரிய பொது சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோா் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...