Newsமுதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய உக்ரைன் மக்கள்

முதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய உக்ரைன் மக்கள்

-

உக்ரைன் மக்கள் முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

உக்ரைன் மக்கள் ஜனவரி 7ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்த நிலையில், தற்போது டிசம்பர் 25ஆம் திகதி முதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

ஜூலியன் நாட்காட்டி மற்றும் ரஷ்ய அரசின் பாரம்பரிய முறைப்படி, ரஷ்யாவில் ஜனவரி மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரஷ்ய கண்டத்தில் உள்ள உக்ரைனும் ரஷ்யாவின் பாரம்பரிய விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்தது.

இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரின் எதிரொலியாக உக்ரைனுக்கு புதிய விதிமுறைகளை அந்நாட்டு ஜனாதிபதி வெலாடிமீர் ஸெலென்ஸ்கி கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஷ்ய பாரம்பரிய முறையைத் தவிர்த்து மேற்கத்திய அல்லது கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை உக்ரைன் மக்கள் கொண்டாடினர்.

இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஸெலென்ஸ்கி டிசம்பர் 24ம் திகதி அறிவித்திருந்தார். அதில் நாட்டு மக்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்ததாவது ”அனைத்து உக்ரைன் மக்களும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும். ஒரே நாளில், ஒரு பெரிய குடும்பமாக, ஒரே நாடாக நாம் ஒன்றிணைய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...